
தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]
நாள்: ஏப்ரல் 18 19 20 (வெள்ளி சனி ஞாயிறு)
முழுமையறிவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மேலை இசை அறிமுக வகுப்புகள் முன்பு அஜிதனால் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து இந்திய இசை, குறிப்பாக கர்நாடக இசையை அறிமுகம் செய்யும் பயிற்சி வகுப்பை நடத்த எண்ணினோம். ஓராண்டாக முயன்றும் அதற்குரிய ஆசிரியரைக் கண்டடைய முடியவில்லை. இங்கே இசை கற்றவர்களும், கற்பிப்பவர்களும் மரபான முறையில் கற்று அதிலேயே நின்றிருக்கிறார்கள். அது ஆசிரியருடன் அமர்ந்து சரளிவரிசை எனப்படும் சுவரங்களை பாடிப்பாடி கற்றுக்கொள்ளும் முறை. அதற்குப் பல ஆண்டு தொடர் பயிற்சி தேவை.
நாங்கள் உத்தேசிப்பது இசை கேட்பதற்கான பயிற்சி, பாடுவதற்கானது அல்ல. இந்திய இசைக்குள் நுழைவதற்கான ஒரு தொடக்கம். அதை நவீனமுறையில் கற்பிக்கும் ஆசிரியர். நாங்கள் நடத்திவரும் எல்லா வகுப்புகளும் நவீன முறைப்படி அமைந்தவை. தீவிரமான, குறுகியகால நேரடிப் பயிற்சிகள் இவை. நவீன கல்விமுறையின் எல்லா முறைமைகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக்கொள்பவை. இசையையும் அவ்வாறே கற்பிக்க முடியும். மூன்றுநாட்களில் இசையின் அடிப்படைகளை பயிற்றுவித்து முதன்மையான சில ராகங்களையும் அடையாளம் காட்டமுடியும். அது ஒரு தொடக்கம். இசையைப் பொறுத்தவரை ‘காது திறப்பது’ தான் முக்கியம். அதன்பின் காதே இசையை கேட்கத் தொடங்கிவிடும்.
ஆலயக்கலை ஆசிரியரான ஜெயக்குமாரே இசையை அறிமுகம் செய்யும் வகுப்புகளையும் நடத்த முன்வந்தார். அவர் கலாக்ஷேத்ராவில் முறையாக இசைபயின்றவர், இசை ஆசிரியர், பாடகராகவும் பணிபுரிபவர். நம் நண்பர்களுக்கு நன்கு தெரிந்தவர்.
தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]
மற்ற வகுப்புகள்
Additional Details
Category -