
தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]
நாள் ஏப்ரல் 4,5 மற்றும் 6 தேதிகளில்
நண்பர் ஃபெய்ஸ் காதிரி உருது மொழி அறிஞர். இந்திய உருதுமொழி இலக்கிய இயக்கத்துடன் முப்பதாண்டுகளாகத் தொடர்புடையவர். உருது மொழி ஆசிரியரும்கூட. அவர் நடத்தும் உருது இலக்கிய அறிமுக வகுப்புகள் நிகழ்கின்றன (இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்)
உருதுமொழி இலக்கியம் இந்தியாவின் பண்பாட்டுச் செல்வங்களில் ஒன்று. பண்டைய இந்தியாவில் உருவான இந்த இலக்கிய மரபு இன்று பாகிஸ்தான் உட்பட பலநாடுகளில் பரவியுள்ளது. குவாஜா முகையதீன் சிஷ்திமுதலிய ஆன்மிகச்செல்வர்கள்மிர்ஸா காலிப் போன்ற நாடோடிப் பெருங்கவிஞர்கள், ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் போன்ற நவீனக் கவிஞர்கள் என அதன் வீச்சு பெரியது.
இந்தியாவின் இரண்டு பெரிய பண்பாட்டியக்கங்களான சூஃபி மெய்யியல் மற்றும் கஸல் இசைமரபு ஆகியவற்றை அறிய உருது இலக்கிய அறிமுகம் மிக அடிப்படையானது.
உருது இலக்கியத்தை அறியாமல் இந்திய இலக்கியத்தை ஒருவர் அர்த்தபூர்வமாக அறிய முடியாது. ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாது
தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]
மற்ற வகுப்புகள்
Additional Details
Category -