முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

மேலையிசை அறிமுகப்பயிற்சி

மேலையிசை அறிமுகப்பயிற்சி அண்மையில் பிரித்தானியாவில் மேற்கத்திய செவ்வியல் இசை நிகழ்வுகளுக்குச் சென்றிருந்தபோதுதான், இன்றும் அத்தனை பேராதரவுடன் இசை நிகழ்வுகள் நடைபெறுவதைக் கண்டுகொண்டேன். ஒரு பெரிய அரங்குக்குள் ஏறத்தாழ மூவாயிரம் பேர் கூடி, ஒரு ‘வெஸ்டர்ன்...

வரவிருக்கும் வகுப்புகள்

There are currently no events.

இன்று

ஓவியம் என்னும் திருப்புமுனை

அன்புள்ள ஜெ, மே 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் வெள்ளிமலையில் நடைபெற்ற  “ஓவிய அறிமுகம் மற்றும் வடிவமைப்புப் பயிற்சி” நடைபெற்ற ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். ஓவியத்தைப் பற்றிய எந்த முன் அனுபவமும் இல்லாத நிலையிலிருந்து, புள்ளி, கோடு, வளைவு போன்ற அடிப்படைகளில் தொடங்கி, இலை, பூ, வீடு, கோயில் என ஒவ்வொன்றையும் வரையப் பழகச் செய்தார் ஓவியர் லலிதா ராகவன். வயதும், தொழிலும் வேறுபட்டிருந்தாலும், அந்த வகுப்பில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த ஓவிய ஆர்வம் மெல்ல வெளிப்பட்டு, அனைவரும் ஓவியர்களாக மாறிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. அவர்களில் ஒருவராக நானும் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அங்கிருந்துதான் நான் நீர்வண்ண ஓவியங்களை வரையத் தொடங்கினேன். பின்னர் ஓவியர் லலிதாவின் இணையவழி வகுப்பில் தொடர்ந்து பயின்று, Shadows, Highlights, வண்ணங்களின் அடுக்குகள் போன்றவற்றைச் சேர்த்து ஓவியங்களை இன்னும் இயல்பாகவும் உயிரோட்டமாகவும் காட்ட முயற்சி செய்தேன். தொடர்ந்து வெவ்வேறு யோசனைகளை முயற்சி செய்து வரையத் தொடங்கியபோது, ஓவியம் என்பது கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு திறன் மட்டுமல்ல; வரையும் அந்த நேரத்திலேயே மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு அனுபவம் என்பதையும் உணர்ந்தேன். 42 வயதில் எனக்குள் ஓவியம் வரையும் திறன் இருப்பதை நான் கண்டறிந்தேன். அதற்கான முதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது வெள்ளிமலையில் நான் கலந்துகொண்ட அந்த வகுப்புதான். இந்த உணர்வு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக இந்த முயற்சியை முன்னெடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய முதல் நீர்வண்ண ஓவியம் வெள்ளிமலையில்தான் உருவானது. அங்கிருந்து கடந்த மூன்று மாதங்களாக, தினமும் சிறிது நேரமாவது ஓவியம் வரைய முயற்சி செய்து வருகிறேன். அதைவிட முக்கியமாக, என் மனதில் தோன்றும் காட்சிகளையும், என்னைத் தொடும் விஷயங்களையும் ஓவியமாக வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறிய window எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தச் window வழியாக என்னை நானே மகிழ்வித்துக்கொள்ள முடிகிறது. சிறு வயதிலிருந்தே வரைவதில் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தாலும், அன்றாட வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் அதை எங்கோ மறந்துவிட்டேன்.“இந்த வகுப்பில் கலந்து பார்” என்று கூறியது என் சகோதரி. இன்று நினைத்துப் பார்க்கையில், அது எனக்கான ஒரு சிறிய திருப்புமுனையாகவே தோன்றுகிறது. ஒருவருக்குள் இருக்கும் திறமை, அதை அவரே அறியாமல் கூட நீண்ட காலம் மறைந்திருக்கலாம். எனக்குள் இருந்த அந்தச் சிறிய திறமையை நான் கண்டுகொள்ள இந்த வகுப்பு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.  இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கும், ஓவியர் லலிதா ராகவன் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் வரைய முடியும் என்ற நம்பிக்கையையும், வரைவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் எனக்குள் உருவாக்கியதற்காக. பிரபாகரன்.

இந்தக் காணொலிகள், கடிதம்

https://www.youtube.com/watch?v=hNGMMJK85RU&t=255s அன்புள்ள ஜெயமோகன், உங்கள் காணொளிகளில் வெளிவரும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இருபது இருபத்தைந்து நிமிடங்களில் யூடியூப் காணொளிகலில் மிக விரிவான சில விஷயங்களை சொல்கிறீர்கள். அதையே ஐந்து நிமிடங்களில் திரும்ப முகநூலில் சொல்கிறீர்கள்....

கல்வியும் பயிற்சியும்

அன்புள்ள ஜெ தொழில்நுட்பக்கல்வி என்பது கல்வி அல்ல, அது ஒரு பயிற்சி மட்டுமே. சிந்திப்பதற்கான பயிற்சிதான் உண்மையான கல்வி. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் உண்மையில் கல்வியற்றவர்கள். அவர்கள் தங்கள் தொழிலில் வென்றிருக்கலாம். அவர்கள் தங்களை...

நமது மூளையைப் பேணிக்கொள்ளுதல்

https://www.youtube.com/watch?v=0ToVKZszAas   அன்புள்ள ஜெயமோகன், கடந்த மூன்றாண்டுகளாக உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்க்கைமுறை மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறேன். உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்த வாழ்க்கையிலிருந்து, நாம் மெல்ல மெல்ல மூளை உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும்...

முருகனும் தமிழும்

https://www.youtube.com/watch?v=5sMK35Im2IU&t=30s திரு.ஜெயமோகன் அவர்களுக்கு. The end of philosophy is the beginning of Religion - Max Muller. German Philosopher. முருகன் தமிழ் கடவுளா? என்ற கேள்வியில் ஆரம்பித்து Epigraphy, Anthropology, Philosophy ,Sociology...

மனநலம் என்பது…

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் அமைப்பின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஓவியப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகள், பறவைகளைப் பார்த்தல், தாவரங்களை அறிதல் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து அறிந்துகொண்டேன். இவை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகவோ அல்லது...

SouthBound- கட்டணம்- ஒரு கேள்வி

நாட்கள் செப்டெம்பர்  11, 12 மற்றும் 13 வெள்ளி சனி ஞாயிறு தொடர்புக்கு [email protected] அன்புள்ள ஜெயமோகன், சௌத் பௌண்டு இதழின் முதல் ஆர்வலர் கூட்டம் நடைபெறவிருப்பதாக நீங்கள் அறிவித்திருந்த செய்தியைப் பார்த்தேன். அதில் மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை என்று...

எளிமை, இனிமை, தியான அனுபவம்.

அன்புள்ள சார், இது ஸ்ரீனி. நடந்து முடிந்த உளக்குவிப்பு வகுப்பில் மூன்று நாட்கள் கலந்து கொண்டேன். வாழ்க்கையை மற்றும் விதத்தில் அமைந்தது. 1. முதலாவதாக , இடம்.  நித்யவானமே பல கற்பிதங்களை தருகிறது. காந்தியின் எளிமையான தோற்றம் மக்களுக்கு எப்படி...

கற்றலுக்கான இடம்

https://www.youtube.com/watch?v=2b4s7wXnciA அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் நடத்தும் வகுப்பு பற்றிய காணொலியில் அந்த ஆலமரத்தடியைப் பார்த்தேன். அதை பார்த்தவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சியும் ஏக்கமும் ஒன்றாக எழுந்தன. எவ்வளவு ஏகாந்தமான, அமைதியான இடம்! இன்று அத்தகைய இடங்கள்...

இசையும் கலையும்

ஜெயமோகன் அவர்களுக்கு, ஜூன் 2026-ல் நடைபெறவுள்ள இசை வகுப்புகளைப் பற்றிக் படித்தபோது, 'அலையலைக்கலை வகுப்புகள்' (Alaiyakalai Vakkupkkal) நிகழ்வில் ஜெயகுமார் அவர்கள் பாடிய பதிகங்களின் அந்த உணர்வுப்பூர்வமான இசைவடிவம் என் நினைவுக்கு வந்தது. இம்முறை...