இளைஞர்களுக்கான உளக்குவிப்புப் பயிற்சி

மே மாதம்  7,8 தேதிகளில் (  செவ்வாய் புதன் இரண்டு நாட்கள்) இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு உதவும் கவனக்குவிப்பு- ஊழ்கப்பயிற்சி.  ஏற்கனவே நிகழ்ந்த 3 நாள் பயிற்சிகள் மாணவர்களுக்காக இரண்டுநாட்கள் நடத்தப்படுகின்றன.

15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.

புகழ்பெற்ற உளப்பயிற்சி நிபுணர் தில்லை செந்தில் பிரபு நடத்துகிறார். தில்லை செந்தில் பிரபு தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிக அமைப்பு ஒன்றில் நீண்டகாலம் முழுநேரப் பயிற்சியாளராக இருந்தவர்.

தில்லை செந்தில் பிரபு பொறியாளர். Asst. General Manager ,Mak Controls and Systems Pvt Ltd ஆக இருந்தவர் இப்போது Vice President , MAK Controls & Systems Pvt. Ltd, Coimbatore. ஆக பணியாற்றுகிறார். ஏழை மாணவர்களின் கல்விக்காக    ANANDA CHAITANYA FOUNDATION எனும் அமைப்பை நடத்தி வருகிறார்

இன்றைய வாழ்க்கையில் நம் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி ஒன்றில் நிலைக்கவிடும் பயிற்சியை முறையாக அடைந்தே தீரவேண்டும். படிப்பு, பணி இரண்டுக்கும் மிக இன்றியமையாதது இப்பயிற்சி. பல தொழில்நிறுவனங்களும் கல்விநிறுவனங்களும் சர்வதேச அளவில் இவற்றை தங்கள் ஊழியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் நிகழ்த்திவருகின்றன

ஏனென்றால் நாம் இன்று பலதிசைகளில் கவனம் சிதறடிக்கப் படுகிறோம். தொடர்ச்சியாக குறைந்தது ஒருமணிநேரம் ஒரு செயலை செய்ய நம்மால் முடியுமா என்பதுதான் இந்நூற்றாண்டின் சவால். செய்ய முடிபவர்கள் மட்டுமே வெல்கிறார்கள்

இப்பயிற்சியை அடைந்து, தொடர்ந்து செய்பவர்கள் அந்த பெரும் வேறுபாட்டை உணரமுடியும்.

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

——————————————————————-

முந்தைய நிகழ்வுகள் – இடமிருப்பவை

சைவத் திருமுறைப் பயிற்சி

சைவ அறிஞரும், பேச்சாளருமான மரபின்மைந்தன் முத்தையா நடத்தும் சைவத் திருமுறைகளை அறிவதற்கும் உணர்வதற்குமான பயிற்சி வரும் மே மாதம் முதல்வாரம் 3,4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நிகழும். ஏற்கனவே நிகழ்ந்த பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு பெரிய அறிவனுபவமாகவும் உணர்வனுபவமாகவும் இருந்தது என்றனர்.

மரபின் மைந்தன் முத்தையா திருவாவடுதுறை ஆதீன வித்வான். மரபான முறையில் தமிழிலக்கியம் பயின்றவர். திருக்கடையூர் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் மரபில் வந்தவர்.

சைவத்திருமுறைகள் பக்தி- தத்துவம் ஆகியவை கொண்ட தமிழ் தொல்நூல்கள். அவற்றை உணர்வுரீதியாக பயில்வதற்கான வழிகாட்டிப் பயிற்சி இது. ஆனால் சமயச்சார்பு அற்றது. அவற்றை இலக்கியமாக அணுக விரும்புபவர்களும் பங்கெடுக்கலாம். அனைத்து மதத்தினரும் பங்கெடுக்கலாம். நவீன இலக்கிய வாசிப்பும், நவீனச் சிந்தனைகளில் பயிற்சியும் கொண்ட ஆசிரியரால் இளைய வாசகர்களுக்காக நடத்தப்படுவது

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

===================================================

 

 

 

 

காட்சிக்கலைப் பயிற்சி

ஏ.வி.மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை, புகைப்படக்கலை அறிமுக வகுப்புகள் ஏப்ரல்   ஏப்ரல் 19 20 மற்றும் 21 தேதிகளில் ஈரோட்டை அடுத்த மலைத்தங்குமிடத்தில் நிகழும்.

—————————————————————————————-

வரவிருக்கும் நிகழ்ச்சிகள்

ஆலயக்கலைப் பயிற்சி

மே மாதம் 10, 11 மற்றும் 12 தேதிகளில் ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் ஆலயக்கலைப் பயிற்சி. இப்பயிற்சிக்குப் பின் அடுத்தகட்ட பயிற்சிகள் சில திட்டமிடப்பட்டுள்ளன.

யோகக்கொண்டாட்டம்

மே 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி. இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. அவர்களின் பயிற்சிநிலை, அதன் தொடர்ச்சி ஆகியவற்றை ஆசிரியர் பரிசீலிப்பார்

குருநித்யா காவிய அரங்கு

மே 24 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ஆண்டுதோறும் நிகழும் குருநித்யா  இலக்கிய விழா.

ஆயுர்வேத வகுப்புகள்

சுனீல் கிருஷ்ணன் காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். புகழ்பெற்ற எழுத்தாளர். ஆயுர்வேத முறைகளை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர் நடத்திய இரண்டு வகுப்புகள் பலருக்கும் மிக உதவியானவையாக இருந்தன.

ஆயுர்வேதம் ஏன் அறிமுகம் செய்துகொள்ளப்படவேண்டும்? நவீன மருத்துவம் நம் உடற்கூறு, நோய்கள், மருத்துவம் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறது. ஆனால் ஆயுர்வேதம்தான் நம் வாழ்க்கைமுறையை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் உணவுமுறை, நம் சூழல் ஆகியவை ஆயுர்வேதத்துக்குத்தான் அணுக்கமானவை. இவற்றைப் பற்றி நாம் ஏராளமான செவிவழிச்செய்திகளை அறிந்து பலவகையான பிழையான புரிதல்களைக் கொண்டிருப்போம். உண்மைநிலையை அறிய ஆயுர்வேதத்தின் அடிப்படைகளை அறியவேண்டும். எளிய முறையில் அதை கற்பிக்கும் நிகழ்வு இது

வரும் மே 31 ஜூன் 1, 2 தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

இந்திய தத்துவ முகாம் நான்காம் நிலை

ஜெயமோகன்

ஜூன் 14 15 16 தேதிகளில் இந்திய தத்துவ அறிமுகம் நான்காம் நிலை நிகழும். முதல் மூன்றுநிலைகளில் பங்கெடுத்தவர்களுக்காக மட்டும். ( ஏப்ரல் 12 13 14 தேதிகளில் இரண்டாவது நிலை பயிற்சியும், ஏப்ரல் 26 27 28 தேதிகளில் மூன்றாம் நிலை பயிற்சிகளும் நிகழ்கின்றன)

முந்தைய கட்டுரைஎங்களைப் பற்றி
அடுத்த கட்டுரைதயக்கமெனும் நோய்