கஸல் இசை,சூஃபி கலை மற்றும் உருது இலக்கிய அடிப்படைகள் அறிமுகம்

சூஃபி மரபில் வந்த அறிஞரும், கவிஞரும், பாடகருuம், அலங்கார எழுத்துக்கலை நிபுணருமான   ஃபயாஸ் காதிரி நடத்தும் வகுப்புகள் மீண்டும் நடைபெற உள்ளன.

இந்த வகுப்பில், இந்தியாவின் கலைமரபில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் இஸ்லாமிய- சூஃபி கலை மரபு பற்றிய அறிமுகம் நிகழும். கசல் இசை அதன் ஒரு ஒளிமிக்க முகம். அலங்கார எழுத்து முறை இன்னொரு கலை வடிவம். சூஃபி கவிதை மரபு மூன்றாவதாக  முக்கியமானது.

உருது இலக்கியக்-கலை மரபு என்று அதை ஒட்டுமொத்தமாகச் சொல்லலாம். பாரசீகக் கலை, அரபியப் பண்பாடு, மற்றும் தொன்மையான இந்திய பண்பாடு ஆகியவற்றின் கலவையாக  இந்தியாவிலே உருவாகி வந்த இந்த மரபுக்கு தமிழகத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு தனித்த துணை மரபு உண்டு, என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

நம் தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இஸ்லாமியக் கலை-இலக்கியம் பற்றி  இங்கு தமிழ் பண்பாடென்றும்  சமகால மரபென்றும் பேசிக் கொண்டிருப்பவர்கள் முழுமையான அறியாமையிலேயே இருக்கிறார்கள். அது  சிந்தனை அளவிலே நமக்கு மிகப்பெரிய குறைபாடுதான். அதன் பொருட்டுதான் இந்த வகுப்புகள்  ஒருங்கிணைக்கப்படுகின்றன.

கசல் இசைப் பாடகர், உருது இலக்கிய அறிஞர், அரபு உருது எழுத்துக்களை நிபுணருமாகிய ஃபயாஸ் காதிரி  இந்த எல்லா கலை வடிவங்களையும்  மூன்று நாள்களின் எளிமையாக அறிமுகம் செய்கிறார். ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும் மகிழ்ச்சியான கற்றலனுபவத்தை அளிக்கும் வகுப்புகளாக இவை முன்பு நிகழ்ந்தன. மீண்டும் நிகழவுள்ளன.

அனைவரையும் வரவேற்கிறோம்.

நாள் ஆகஸ்ட் 21, 22, 23

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைபணம் – கடிதம்