ஜெயமோகன் அவர்களுக்கு,
வாசிக்கும் வழிகளை பற்றிய காணொளியை பார்த்தேன்.வாசிப்பும் தியானம்தான். வாசிப்புதான் உலகிலுள்ள கலாச்சாரத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தியது. நவீன உலகில் எப்படி வாசிக்க வேண்டும் என்று கூறியதற்கு நன்றி.
Reading maketh a man.என்ற ஆங்கில சொல் வழக்கு உண்டு.அண்மையில் மத்திய அரசு பாட திட்டத்தில் Learning Disability என்ற பதத்தை உபயோகித்திருக்கிறார்கள்.கொரோனா காலகட்டத்திலிருந்து மாணவர்களுக்கு படிப்பு சவாலாக மாறி இருக்கிறது. காரணம் மெபைல் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு அவர்கள் இன்னும் பேனா காகிதத்திற்கு மீண்டு வரவில்லை.தற்போது FLN (Foundational Literacy and Numeracy) என்ற ஒரு முயற்சியை கல்வித்துறை மேற்கொண்டு இருக்கிறது.மாணவர்களை மீண்டும்அடிப்படையாக எழுத படிக்க , அடிப்படை கணக்கு பற்றி கட்டாயமாக தெரிந்து கொள்ள வைக்கும் முயற்சி இது. கவனச்சிதறல் அதிகமாக உள்ள காலகட்டத்தில் வாசிப்பு (Reading) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும் சவால்கள் நிறைந்தது.கணனித்திரை வாசிப்பு (Screen time) நேரத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.புத்தகத்தை நேரடியாக வாசிப்பது சுயசிந்தனை,கற்பனை வளத்தை, எழுத்தறிவை, வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. பள்ளி கல்லூரிகளில் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் கரும்பலகைகள் மற்றும் சாக்பீஸ் முறைக்கு சென்றால் ஒருவேளை சரிசெய்யலாம் ஆசிரியர்களும் கணனிதிரை வகுப்புகளை (Smartboard)பயன்படுத்துவதால் அவர்களும் கரும்பலகையில் எழுதுவது குறைந்து விட்டது .வாசிப்பும் குறைந்து விட்டது.அடிப்படை எழுத்தறிவு கவனிக்கப்பட்டால் மட்டும் வாசிப்பு வளர சாத்தியப்படும் இல்லையென்றால் மின்னல் வேகச்செய்திகள் (Flash news)மற்றும் 30 நிமிட சார்ட்ஸ் போல வாசிப்பும் மின்னல் போல மின்னி மறைந்து விடும்.அறிவுத்தேக்கம் ஏற்பட்டு கல்வியிலும் தேக்கநிலை ஏற்பட்டுவிடும்.பள்ளி தேர்வுக்காக வாசிக்காமல், வாழ்க்கைக்காக வாசிக்க வேண்டும் என்ற உங்கள் சிந்தனை சிறப்பாக இருந்தது.
தொடர்ந்து வாசிப்பு பயிற்சியை ஒரு வகுப்பாக கூட நீங்கள் முழுமையறிவு மூலம் பள்ளி மாணவர்களுக்கு நடத்தலாம்.
தா.சிதம்பரம்.