அன்புள்ள ஜெ
முழுமையறிவு வகுப்புகளில் தாங்கள் கற்றது என்ன என்று சுசித்ராவும் நவீனும் பேசும் வீடியோ பார்த்தேன். அழ்ந்த சூழலின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது. அவர்களும் மிகுந்த உற்சாகத்துடனும் ஒருவகையான நெகிழ்வுடனும் பேசிக்கொண்டார்கள். அதிலும் குறிப்பாக சுசித்ரா சொன்ன ஒரு விஷயம் என்னை பெருமளவு யோசிக்க வைத்தது. தர்க்கததை முறையாகக் கற்றுக்கொள்வது என்பது இன்னொருவரிடம் விவாதிப்பதற்காக அல்ல, நாமே நமக்குள்ளே ஒன்றை விவாதித்து தெளிவுபடுத்திக்கொள்வதற்காகத்தான் என்பது மிகமுக்கியமான ஒரு கருத்து. அருமையான உரையாடல்.
சந்திரசேகர்