நவீன ஓவியக்கலையை ரசிக்கும் பயிற்சி.

நவீன ஓவியங்களை புரிந்துகொள்வதென்பது இன்றைய இளையதலைமுறைக்கு நவீன வாழ்க்கைச்சூழலில் மிக அவசியமான ஒன்று. ஒரு நட்சத்திர விடுதியில், ஒரு செல்வந்தரின் இல்லத்தில் அசல் ஓவியமொன்றை காணும் வாய்ப்பு அமையாதவர்கள் குறைவு. இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு அவற்றை எப்படி ரசிப்பதென்று தெரியாது. அடிப்படைப் பயிற்சியே நம் சூழலில் இல்லை. கணிசமானவர்கள் ஏதாவது அபத்தமாகச் சொல்லி ஓவியக்கலை அறிமுகம் உடைய அயல்நாட்டவர் முன் தங்களை கேலிப்பொருளாக்கிக்கொள்வதுமுண்டு

ஓவியக்கலை அறிமுகம் என்பது வரைவதற்கான பயிற்சி அல்ல. பார்ப்பதற்கான பயிற்சி. அதை அடைந்ததுமே நம்மைச்சூழ்ந்துள்ள உலகம் மாறிவிட்டிருப்பதை காண்போம். நம் கட்டிடங்கள், நம் நுகர்பொருட்கள் ,நம் ஆடைகள் எல்லாமே நவீன ஓவியத்தின் விளைவாக உருவானவை என அறிவோம்.

நீண்டநாட்களாக பல இளைஞர்கள் கோரியதற்கு ஏற்ப நவீன ஓவியம், நவீன புகைப்படக்கலை பற்றிய ஓர் அறிமுகவகுப்பை புகழ்பெற்ற புகைப்படக்கலைஞரும், நவீனக் கலை விமர்சகருமான நண்பர் ஏ.வி.மணிகண்டன் நடத்த ஒப்புக்கொண்டுள்ளார்

வகுப்பு ஆறு தலைப்புகளில் தனி அமர்வுகளாக அமையும்

  • காண்பியல் கலையை அணுக தத்துவ அழகியல் பயிற்சியின் தேவை குறித்தும் அவற்றை மீறிச் செல்வது குறித்தும்.
  • கீழை மேலை மரபின் வேறுபாடுகளும், அவற்றின் கலை வெளிப்பாட்டின் வேறுபாடுகளும். அவற்றைத்தாண்டி மேலைக் கலையை அணுகுவது குறித்தும்.
  • 19-ஆம் நூற்றாண்டு வரையிலான மேலைக் கலை மரபின் வரலாறும் அழகியல் விவாதங்களும், கலைப்படைப்புகளின் வழியாக.
  • காண்பியல் கலையையும் கலைப் படைப்பையும் வாசிக்கும் முறைமைகள் குறித்து ஒரு அறிமுகம். படிமங்களை வாசிப்பது ஓவிய/சிற்ப/புகைப்பட கலையில்.
  • இருபதாம் நூற்றாண்டு முதல் இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரையிலான போக்குகள். அவான் கார்ட், நவீனத்துவ, பின் நவீனத்துவக் கலை இயக்கங்களும் சமகால கலையும்.
  • புகைப்படக்கலையில் வரலாறும் அழகியல் போக்குகளும். புகைப்படங்களை வாசிப்பதன் முறைமைகளும்

இவை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழும்

நாள் செப்டெம்பர் – 22. 23 24 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள்

[email protected]

என்னும் விலாசத்துக்கு எழுதலாம்

ஜெ

முந்தைய கட்டுரைபுதிய புல்வெளிகள்…
அடுத்த கட்டுரைநவீன ஓவியக்கலையும் இன்றைய வாழ்க்கையும்…