மேலைத் தத்துவ அறிமுகம்

பேராசிரியர் இரா.முரளி தமிழ்க் கல்வித்துறை உருவாக்கிய முக்கியமான தத்துவப்பேராசிரியர். இந்திய தத்துவம், மேலைத்தத்துவம் ஆகிய தளங்களில் விரிவான பயிற்சி கொண்டவர். அவருடைய சாக்ரடீஸ் ஸ்டுடியோ என்னும் யூடியுப் சானல் வெளியிட்டுள்ள தத்துவ விளக்க காணொலிகளுக்கு பல்லாயிரக்கணக்கான பயனர்கள் உண்டு. தெளிவாக அடிப்படைகளை விளக்குபவர் என அறியப்பட்டிருக்கிறார்

பேராசிரியர் முரளி நடத்தும் நேரடியான தத்துவ வகுப்புகள் அக்டோபர் 4,5 மற்றும் 6 (வெள்ளி சனி ஞாயிறு)  தேதிகளில் நிகழவுள்ளன. ஆசிரியருடன் உடனமர்ந்து கற்றுக்கொள்ளும் வகுப்புகள் இவை.

இவ்வகுப்புகளில் மேலைத்தத்துவம் பற்றிய ஓர் ஒட்டுமொத்த அறிமுகத்துடன் , மேலைத்தத்துவத்தின் அடித்தளக்கற்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடிலின் தத்துவங்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை அளிக்கவிருக்கிறார்.

மேலைச்சிந்தனையை ஒட்டியே நம் நவீன சிந்தனைகள் அனைத்தும் நிகழ்கின்றன. நம் நவீன அறிவியலின் அடித்தளமும் அதுவே. மேலைச்சிந்தனையின் அடிப்படைகளை வகுத்தவர்கள் மேலே குறிப்பிட்ட மூவரும். அவர்கள் பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் மேலைசிந்தனையின் எப்பிரிவுக்குள்ளும் நுழைய முடியாது.

இது பொதுவாசகர்கள், மாணவர்களுக்கான வகுப்பு

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

சாக்ரடீஸ் ஸ்டுடியோ யுடியூப் சானல்

பேராசிரியர் முரளி பேட்டி 

—————————————————————————————

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்

( இடமிருப்பவை)

(கடைசிநாள்  வரை விண்ணப்பிக்கலாம்)

 

விபாசனா- பௌத்த தியானப்பயிற்சி

வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.  முதல் வகுப்பு சென்ற ஜூலை முதல் வாரம் நிகழ்ந்தது, விரைவிலேயே அதன் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் அடுத்த வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத்  தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.

இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்

யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.

பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.

செப்டெம்பர்

செப்டெம்பர் 6, 7 and 8 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

விபாசனா, கடிதம்

பௌத்தம்,விபாசனா- கடிதம்

வீடும் வகுப்பும், கடிதம்

 

தமிழ் மரபிலக்கிய அறிமுகப் பயிற்சி

தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் அல்ல, தமிழினூடாக தங்கள் சமயத்தையும், வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவரும் மரபிலக்கியம் பயின்றாகவேண்டும். இத்தனைபெரிய மரபிலக்கியம் உள்ள ஒரு மொழியில் புழங்குபவர் அதில் அறிமுகமே இல்லாமலிருப்பதென்பது மாபெரும் குறைபாடு.

ஆனால் மரபிலக்கியத்தைக் கற்பதற்கு நமக்கு கல்விநிலையங்களின் பாடத்திட்டங்களும், நூல்களும் மட்டுமே உள்ளன. அவற்றில் மரபிலக்கியத்தை ‘பொருள் அறிய’ முடியுமே ஒழிய அதை ரசிக்கும் வழிமுறையை பயில முடியாது. மரபிலக்கியத்தை ரசிப்பவர்களே அதில் தொடர்ச்சியாக ஈடுபட முடியும். எஞ்சியோருக்கு அது வெறும் செய்தித்தொகைதான்.

அந்த ரசனையை உருவாக்க முறையான வழிகாட்டுதல் தேவை. ‘ரசிகமணி’ டி.கெ.சிதம்பரநாத முதலியார் நவீன காலகட்டத்தில் அத்தகைய ரசனையை உருவாக்க முன்னோடியாக அமைந்தவர். தேர்ந்தெடுத்த பாடல்கள் வழியாக அந்த ரசனையை உருவாக்கிக்கொண்டு மேலும் முன்னகர முடியும். இன்றைய சூழலில் அத்தகைய கல்வி இன்றியமையாதது.

மரபின்மைந்தன் முத்தையா ரபிலக்கியத்தில் முறையான பயிற்சியும் நவீன இலக்கிய வாசிப்பும் உடையவர். அவர் நடத்தும் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள் நிகழவுள்ளன. இது இலக்கணப்பயிற்சியோ, இலக்கியத்தின் மீதான ஆராய்ச்சியோ அல்ல. இலக்கியத்தை ரசிப்பதற்கான பயிற்சி மட்டுமே

செப்டெம்பர் மாதம் 20 21மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 

==============================================

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

உளக்குவிப்பு -தியானம் அறிமுகப்பயிற்சி 

தில்லை செந்தில்பிரபு நடத்தும் உளக்குவிப்பு மற்றும் தியானப்பயிற்சிகள் பல முகாம்களாக நடைபெற்றுள்ளன. ஏராளமான பங்கேற்பாளர்கள் அவை அளித்த ஆழ்ந்த தன்னறிதலை எழுதியுள்ளனர்.

யோகம், தியானம் ஆகியவை சென்ற நூற்றாண்டில் அனைவருக்கும் உரியவையாக இருக்கவில்லை. இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் மூளையுழைப்புக்கு வந்துவிட்டோம். பழைய இறுக்கமான குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் இன்றில்லை. ஆகவே அனைவரும் தனியர்கள். ஊடகப்பெருக்கம் காரணமாக நம் கவனம் சிதறடிக்கப்படுகிறது.

விளைவாக ஒவ்வொருவரும் உளச்சோர்வுக்கு ஆளாகிறோம். உளச்சோர்வுக்கு மருந்து கவனம் குவித்து பணியாற்றுவது. அதுவும் இயல்வதில்லை. இச்சூழலில் மரபார்ந்த யோக- தியான முறைமைகளின் நவீன கலவையான செயல்முறைகளும், உளப்பயிற்சிகளும் பேருதவியாக அமைபவை. சென்ற ஐம்பதாண்டுகளில் மறு அமைப்பு செய்யப்பட்ட அந்த யோக- தியான முறைகளை அத்துறையில் இருபத்தைந்தாண்டுக்கால பயிற்சியும் அனுபவமும் கொண்ட தில்லை செந்தில் பிரபு கற்பிக்கிறார்.

செப்டெம்பர் 27 28 மற்றும் 29 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

தியானம் -உளக்குவிதல் பயிற்சி

தியானம், கடிதம்

தில்லை செந்தில்பிரபு – கடிதம்

வேண்டுதலா தியானமா?

தியானமும் யோகமும் எவருக்காக?

இன்றைய உளச்சோர்வுகள்

உளச்சோர்வின் ஊற்றுக்கண்

வரவிருக்கும் நிகழ்வுகள்

இப்போதே விண்ணப்பிக்கலாம்

பறவை பார்த்தல் பயிற்சி  

சென்ற கோடைவிடுமுறையில் நாங்கள் ஒருங்கிணைத்த பறவை பார்த்தல் நிகழ்வு சிறார் நடுவே மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோரிடமும் உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. ஆகவே குளிர்கால பறவைபார்த்தல் நிகழ்வை வரும்

அக்டோபர் 11 12 மற்றும் 13

தேதிகளில் நிகழ்த்தலாமென எண்ணுகிறோம். இவை நவராத்திரி விடுமுறை நாட்கள் என்பதனால் சிறுவர்கள் கலந்துகொள்ள முடியும். 10 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர் என்றால் பெற்றோரோ மூத்தவர்களோ உடனிருக்கவேண்டும்.

பறவைகளை பார்க்க ஆரம்பிப்பது என்பது வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஓர் இனிய அனுபவ உலகின் தொடக்கம். சிறுவர்களைப் பொறுத்தவரை காணொளிகளில் மூழ்கி கவனச்சிதறல் கொண்டிருக்கும் அவர்களுக்கு இயற்கையை அறியவும், இயற்கையில் கவனம்குவித்து அமர்ந்திருக்கவும் மிகச்சிறந்த பயிற்சியாக இது இன்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

பறவைகளின் வகைகள், ஓசைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்துகொள்வதும்; அவற்றை எப்படிப் பார்ப்பது என கற்பதும் அத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவருடைய வழிகாட்டலால் சிறப்பாக நிகழும். இப்பயிற்சியை விஜயசாரதி மற்றும் ஈஸ்வரமூர்த்தி நடத்துவார்கள்.

வேலியிடப்பட்ட, பாதுகாப்பான காடு என்று சொல்லத்தக்க இயற்கையான அடர்சூழலில் இப்பயிற்சி நிகழும்.

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 

பதஞ்சலி மரபு யோகம்- அறிமுகப்பயிற்சி

யோக ஆசிரியர் சௌந்தர் தொடர்ச்சியாக நடத்திவரும் யோகப்பயிற்சிகள் இன்று பெரும்புகழ்பெற்றுவிட்டன. மலேசியா, ஶ்ரீலங்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தொடர்ச்சியாகச் சென்று யோக வகுப்புகளை நடத்தி வருகிறார் .

சௌந்தர் நடத்தும் யோக அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழவிருக்கின்றன.

நாள்: அக்டோபர் 18 ,19 மற்றும் 20 

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்

 

சைவசித்தாந்த அறிமுக வகுப்புகள்

சைவசித்தாந்த அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன.வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகள் வகுப்புகளை நடத்துகிறார். சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்ற சாந்திகுமார அடிகள் நடத்திய சென்ற வகுப்புகள் குறித்து பெரும் உளக்கிளர்ச்சியுடன் பங்கேற்பாளர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்திய சிந்தனையின் விரிவான வரைபடத்தை அளித்து, அதில் சைவத்தின் இடத்தை வகுத்து, அதன் ஒவ்வொரு அடிப்படைக்கொள்கையையும் நவீனகாலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காக அவர் கற்பித்த எளிமையான அறிமுகம் ஒரு மாபெரும் முன்னுதாரணம் என்றனர்.

தமிழகத்தில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவத்தை அறிந்தவர்கள் அவர்களில் மிகச்சிலரே. ஓர் எளிய அறிமுகமே நம் ஆலயங்களை, நம் அன்றாடச் சடங்குகளை முற்றிலும் புதிய ஒளியில் காட்டிவிடும் என்பதை கற்றவர்கள் உணரமுடியும். நம் வாழ்க்கையின் கோணமே அதனூடாக மாறிவிடும்.

இது மதக்கல்வி அல்ல. ஆசாரப்பயிற்சியும் அல்ல. இது முற்றிலும் தத்துவக் கல்வி. எந்த தத்துவத்திலும் ஈடுபாடுள்ளவர்கள் கற்கலாம். எல்லா தத்துவமரபையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் பங்கேற்கலாம்

நாள் அக்டோபர் 25, 26 மற்றும் 27 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

சைவசித்தாந்த வகுப்பு -கடிதம்

சைவசித்தாந்த வகுப்பு – கடிதம்

சைவசித்தாந்த வகுப்பு -கடிதம்

சைவசித்தாந்தமும் தத்துவக் கல்வியும்,ஒரு வினா

நவீனமருத்துவ அறிமுகம் 

மருத்துவர் மாரிராஜ் நடத்திய நவீன மருத்துவ அறிமுக வகுப்பு மிக உதவியானதாக இருந்தது என்றும், குறிப்பாக மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது என்றும் கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன.

நவீன மருத்துவம் நம் வாழ்க்கையின் அன்றாடத்துடன் தொடர்புடையது, ஆனால் அதைப்பற்றி நமக்கு பெரிதாக ஏதும் தெரியாது, நாமறிந்துள்ளவை பெரும்பாலும் செவிவழிச்செய்திகளும் கற்பனையும்தான் ஆகவேதான் போலிமருத்துவங்களுக்கு எளிதில் ஆட்படுகிறோம். முறையாக அறிந்துகொள்வது நூற்றுக்கணக்கான அன்றாடச்சிக்கல்களில் இருந்து நம்மைக் காப்பது. குறிப்பாக குழந்தைகளோ முதியோரோ நம் இல்லத்தில் இருந்தார்கள் என்றால் மிக அவசியமானது.

இது மருந்து, மற்றும் நோய்கள் பற்றிய தகவல் கல்வி அல்ல. உடல் என்னும் விந்தை செயல்படும் முறையைப்பற்றியும் அதனுடன் நாம் கொள்ளும் உறவு பற்றியும் நிகழும் வகுப்பு. நம்மைப்பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையையே மாற்றியமைக்கும் கல்வி.

நாள் நவம்பர் 1,2 மற்றும் 3

நவீன மருத்துவம், கடிதம்

நவீன மருத்துவப் பயிற்சி, கடிதம்

மாரி ராஜ் கடிதம்

இந்திய ஆலயக்கலை அறிமுகம். தொடக்கநிலையினருக்காக 

ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் இந்திய ஆலய- சிற்பக்கலை அறிமுக வகுப்புகள். இவை தொடக்கநிலையினருக்காக நடத்தப்படுகின்றன. ஏற்கனவே பலமுறை நிகழ்ந்தவை. இந்தியச் சிற்பக்கலையை, ஆலயக்கட்டுமானங்களை அறிந்து ரசிப்பதற்கான பயிற்சி இது

நாள் 8 9 மற்றும் 10 நவம்பர் (வெள்ளி சனி ஞாயிறு)

இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை

இந்திய தத்துவ அறிமுகம் நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் பங்குகொள்ளலாம்.

நாள் நவம்பர் 15 16 மற்றும் 17

முந்தைய கட்டுரைஇஸ்லாம், கடிதம்
அடுத்த கட்டுரைகவனித்தலின் அடிப்படை என்ன?