உளக்குவிப்பு -தியானம் அறிமுகப்பயிற்சி 

உளக்குவிப்பு -தியானம் அறிமுகப்பயிற்சி 

தில்லை செந்தில்பிரபு நடத்தும் உளக்குவிப்பு மற்றும் தியானப்பயிற்சிகள் பல முகாம்களாக நடைபெற்றுள்ளன. ஏராளமான பங்கேற்பாளர்கள் அவை அளித்த ஆழ்ந்த தன்னறிதலை எழுதியுள்ளனர்.

யோகம், தியானம் ஆகியவை சென்ற நூற்றாண்டில் அனைவருக்கும் உரியவையாக இருக்கவில்லை. இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் மூளையுழைப்புக்கு வந்துவிட்டோம். பழைய இறுக்கமான குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் இன்றில்லை. ஆகவே அனைவரும் தனியர்கள். ஊடகப்பெருக்கம் காரணமாக நம் கவனம் சிதறடிக்கப்படுகிறது.

விளைவாக ஒவ்வொருவரும் உளச்சோர்வுக்கு ஆளாகிறோம். உளச்சோர்வுக்கு மருந்து கவனம் குவித்து பணியாற்றுவது. அதுவும் இயல்வதில்லை. இச்சூழலில் மரபார்ந்த யோக- தியான முறைமைகளின் நவீன கலவையான செயல்முறைகளும், உளப்பயிற்சிகளும் பேருதவியாக அமைபவை. சென்ற ஐம்பதாண்டுகளில் மறு அமைப்பு செய்யப்பட்ட அந்த யோக- தியான முறைகளை அத்துறையில் இருபத்தைந்தாண்டுக்கால பயிற்சியும் அனுபவமும் கொண்ட தில்லை செந்தில் பிரபு கற்பிக்கிறார்.

செப்டெம்பர் 27 28 மற்றும் 29 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு [email protected]

தியானம் -உளக்குவிதல் பயிற்சி

தியானம், கடிதம்

தில்லை செந்தில்பிரபு – கடிதம்

வேண்டுதலா தியானமா?

தியானமும் யோகமும் எவருக்காக?

இன்றைய உளச்சோர்வுகள்

உளச்சோர்வின் ஊற்றுக்கண்


அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்( இடமிருப்பவை)

(கடைசிநாள்  வரை விண்ணப்பிக்கலாம்)

மேற்கத்திய கலைமரபு (ஓவியம், புகைப்படம்) ஏ.வி.மணிகண்டன்  

கலைச்சிந்தனையாளரும், புகைப்பட நிபுணருமான ஏ.வி.மணிகண்டன் நடத்தும் மேற்கத்தியக் கலைமரபு வகுப்பு நான்காம் முறையாக நடைபெறுகிறது. நான்காவது அணி மாணவர்கள் இடம்பெறுகிறார்கள். முன்பு நடந்த வகுப்புகளில் பங்குகொண்டவர்களில் பலர் அவர்கள் வாழ்க்கையின் இன்னொரு தொடக்கம் என்றே எழுதியிருக்கிறார்கள். அந்த வகுப்புகளின் மறு தொடர்ச்சி இது.

இது ஓவியப்பயிற்சி அல்ல. ஓவியம்- காட்சிக்கலையின் அழகியல் என்ன, அதிலுள்ள வெவ்வேறு கலைமரபுகள் என்னென்ன என்பதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இது. ஒரு நவீன மனிதன், இன்றைய சமகால உலகில் புழங்குவதற்கேகூட இந்தப் பயிற்சி அவசியமானது. ஓர் இல்லத்தை உள்ளலங்காரம் செய்வதை முடிவெடுக்க, ஒரு கட்டிடத்தின் அமைப்பை புரிந்துகொள்ள,ஓர் ஆடையை முடிவுசெய்ய இன்று ஒருவருக்கு அடிப்படை அழகியல் பயிற்சி தேவையாகிறது. அது நம் கல்வியமைப்பினூடாக எங்குமே அளிக்கப்படுவதில்லை. இது அதற்கான ரசனைப்பயிற்சி. கலையின் தத்துவத்துடன் இணைத்து இப்பயிற்சி அளிக்கப்படுகிறது

நாள் ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டெம்பர் 1 கலந்துகொள்பவர்கள் தொடர்புகொள்ளலாம்

[email protected]

——-         ————     —————————-

ஓவியப்பயிற்சிக்குப் பின்…ஒரு கடிதம்  

ஓவியம்- கடிதம்

கண்களைக் கண்டடைதல், கடிதம்

சித்திரம் பயில்தல், கடிதம்

ஓவியத்தினூடாக அறிதல், கடிதம்

ஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்

ஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்

ஓவியங்களை அறிதல்- கடிதம்

வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.  முதல் வகுப்பு சென்ற ஜூலை முதல் வாரம் நிகழ்ந்தது, விரைவிலேயே அதன் இடங்கள் நிறைவுற்றமையால் மீண்டும் அடுத்த வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார். 2008-ல் ஜென் துறவி திக் நாட் ஹஞ் அவர்களிடம் நேரடிப் பயிற்சியை வியட்நாமில் பெற்றுக் கொண்டார்.2010-ல் மூன்று வருடங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பாட்ரிக் கீர்னி எனும் விபசனா ஆசிரியரை கொடைக்கானலில் உள்ள போதி ஜென்டோ மையத்திற்குத்  தொடர்ந்து அழைத்து வந்து கற்றுக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து தவ முகாம் நடத்தவும் கற்றுக்கொண்டார். 2013-ல் சோகிஈமா ரின்போசே மூலம் திபெத்திய மகாமுத்ரா, ட்சோக்சென் பயிற்சி பெற்றார்.

இரண்டரை ஆண்டு அகவிழிப்புத் தியானப்பயிற்சி ஆசிரியராக The Awareness Training Institute and the Greater Good Science Center at the University of California மையத்தால் பயிற்சியும் சான்றும் (MMTCP) பெற்றுக் கொண்டார்

யோகமரபின் தொடக்கம் எது என நமக்குத் தெரியாது. சாங்கிய தரிசனத்தின் ஒரு கிளையாக அது பதஞ்சலியால் வரையறை செய்யப்பட்டது. பின்னர் சமண மதத்தில் வளர்ச்சி அடைந்தது. அதை முழுவிரிவை அடையச்செய்தவர்கள் பௌத்தர்கள். பௌத்த யோகாசார மரபே தியானம் என்பதற்கான இன்றைய அர்த்ததை உருவாக்கியது. அசங்கர், வசுபந்து, திக்நாகர், நாகார்ஜுனர், தர்மகீர்த்தி, தர்மசேனர், தர்மபாலர் என அதன் ஆசிரியர் மரபு மிக விரிவானது. போதிதர்மர் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்று ஜென் பௌத்தம் ஆகியது. பத்மசம்பவர் வழியாக திபெத் சென்று திபெத்திய பௌத்தமாக ஆகியது. திபெத்திய பௌத்தம் வஜ்ராயனம் எனப்படுகிறது.

பௌத்தம் வளர்த்தெடுத்த யோகாசார மரபு இந்தியாவில் பெரும்பாலும் மறைந்துவிட்டது, அதன் அடிப்படைகள் சில வேறுவகையில் நீடிக்கின்றன. பௌத்த தியான – மெய்யியல் மரபை அது இங்கிருந்து சென்று வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும் திபெத், ஜப்பான், தாய்லாந்து பௌத்த மரபுகளிடமிருந்தே நாம் கற்கமுடிகிறது. இப்பயிற்சி அதற்கான முயற்சி.

செப்டெம்பர்

செப்டெம்பர் 6, 7 and 8 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

விபாசனா, கடிதம்

பௌத்தம்,விபாசனா- கடிதம்

வீடும் வகுப்பும், கடிதம்

 

தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் அல்ல, தமிழினூடாக தங்கள் சமயத்தையும், வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவரும் மரபிலக்கியம் பயின்றாகவேண்டும். இத்தனைபெரிய மரபிலக்கியம் உள்ள ஒரு மொழியில் புழங்குபவர் அதில் அறிமுகமே இல்லாமலிருப்பதென்பது மாபெரும் குறைபாடு.

ஆனால் மரபிலக்கியத்தைக் கற்பதற்கு நமக்கு கல்விநிலையங்களின் பாடத்திட்டங்களும், நூல்களும் மட்டுமே உள்ளன. அவற்றில் மரபிலக்கியத்தை ‘பொருள் அறிய’ முடியுமே ஒழிய அதை ரசிக்கும் வழிமுறையை பயில முடியாது. மரபிலக்கியத்தை ரசிப்பவர்களே அதில் தொடர்ச்சியாக ஈடுபட முடியும். எஞ்சியோருக்கு அது வெறும் செய்தித்தொகைதான்.

அந்த ரசனையை உருவாக்க முறையான வழிகாட்டுதல் தேவை. ‘ரசிகமணி’ டி.கெ.சிதம்பரநாத முதலியார் நவீன காலகட்டத்தில் அத்தகைய ரசனையை உருவாக்க முன்னோடியாக அமைந்தவர். தேர்ந்தெடுத்த பாடல்கள் வழியாக அந்த ரசனையை உருவாக்கிக்கொண்டு மேலும் முன்னகர முடியும். இன்றைய சூழலில் அத்தகைய கல்வி இன்றியமையாதது.

மரபின்மைந்தன் முத்தையா ரபிலக்கியத்தில் முறையான பயிற்சியும் நவீன இலக்கிய வாசிப்பும் உடையவர். அவர் நடத்தும் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள் நிகழவுள்ளன. இது இலக்கணப்பயிற்சியோ, இலக்கியத்தின் மீதான ஆராய்ச்சியோ அல்ல. இலக்கியத்தை ரசிப்பதற்கான பயிற்சி மட்டுமே

செப்டெம்பர் மாதம் 20 21மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

 

==============================================

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

வரவிருக்கும் நிகழ்வுகள்

(இப்போதே விண்ணப்பித்து பதிவுசெய்துகொள்ளலாம்)

பேராசிரியர் இரா.முரளி தமிழ்க் கல்வித்துறை உருவாக்கிய முக்கியமான தத்துவப்பேராசிரியர். இந்திய தத்துவம், மேலைத்தத்துவம் ஆகிய தளங்களில் விரிவான பயிற்சி கொண்டவர். அவருடைய சாக்ரடீஸ் ஸ்டுடியோ என்னும் யூடியுப் சானல் வெளியிட்டுள்ள தத்துவ விளக்க காணொலிகளுக்கு பல்லாயிரக்கணக்கான பயனர்கள் உண்டு. தெளிவாக அடிப்படைகளை விளக்குபவர் என அறியப்பட்டிருக்கிறார்

பேராசிரியர் முரளி நடத்தும் நேரடியான தத்துவ வகுப்புகள் அக்டோபர் 4,5 மற்றும் 6 (வெள்ளி சனி ஞாயிறு)  தேதிகளில் நிகழவுள்ளன. ஆசிரியருடன் உடனமர்ந்து கற்றுக்கொள்ளும் வகுப்புகள் இவை.

இவ்வகுப்புகளில் மேலைத்தத்துவம் பற்றிய ஓர் ஒட்டுமொத்த அறிமுகத்துடன் , மேலைத்தத்துவத்தின் அடித்தளக்கற்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடிலின் தத்துவங்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை அளிக்கவிருக்கிறார்.

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு [email protected]

 

சாக்ரடீஸ் ஸ்டுடியோ யுடியூப் சானல்

பேராசிரியர் முரளி பேட்டி 

பறவை பார்த்தல் பயிற்சி  

சென்ற கோடைவிடுமுறையில் நாங்கள் ஒருங்கிணைத்த பறவை பார்த்தல் நிகழ்வு சிறார் நடுவே மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோரிடமும் உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. ஆகவே குளிர்கால பறவைபார்த்தல் நிகழ்வை வரும்

அக்டோபர் 11 12 மற்றும் 13

தேதிகளில் நிகழ்த்தலாமென எண்ணுகிறோம். இவை நவராத்திரி விடுமுறை நாட்கள் என்பதனால் சிறுவர்கள் கலந்துகொள்ள முடியும். 10 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர் என்றால் பெற்றோரோ மூத்தவர்களோ உடனிருக்கவேண்டும்.

பறவைகளை பார்க்க ஆரம்பிப்பது என்பது வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஓர் இனிய அனுபவ உலகின் தொடக்கம். சிறுவர்களைப் பொறுத்தவரை காணொளிகளில் மூழ்கி கவனச்சிதறல் கொண்டிருக்கும் அவர்களுக்கு இயற்கையை அறியவும், இயற்கையில் கவனம்குவித்து அமர்ந்திருக்கவும் மிகச்சிறந்த பயிற்சியாக இது இன்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

பறவைகளின் வகைகள், ஓசைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்துகொள்வதும்; அவற்றை எப்படிப் பார்ப்பது என கற்பதும் அத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவருடைய வழிகாட்டலால் சிறப்பாக நிகழும். இப்பயிற்சியை விஜயசாரதி மற்றும் ஈஸ்வரமூர்த்தி நடத்துவார்கள்.

வேலியிடப்பட்ட, பாதுகாப்பான காடு என்று சொல்லத்தக்க இயற்கையான அடர்சூழலில் இப்பயிற்சி நிகழும்.

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு [email protected]

 

பதஞ்சலி மரபு யோகம்- அறிமுகப்பயிற்சி

யோக ஆசிரியர் சௌந்தர் தொடர்ச்சியாக நடத்திவரும் யோகப்பயிற்சிகள் இன்று பெரும்புகழ்பெற்றுவிட்டன. மலேசியா, ஶ்ரீலங்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தொடர்ச்சியாகச் சென்று யோக வகுப்புகளை நடத்தி வருகிறார் .

சௌந்தர் நடத்தும் யோக அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழவிருக்கின்றன.

நாள்: அக்டோபர் 18 ,19 மற்றும் 20 

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்

 

சைவசித்தாந்த அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன.வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகள் வகுப்புகளை நடத்துகிறார். சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்ற சாந்திகுமார அடிகள் நடத்திய சென்ற வகுப்புகள் குறித்து பெரும் உளக்கிளர்ச்சியுடன் பங்கேற்பாளர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்திய சிந்தனையின் விரிவான வரைபடத்தை அளித்து, அதில் சைவத்தின் இடத்தை வகுத்து, அதன் ஒவ்வொரு அடிப்படைக்கொள்கையையும் நவீனகாலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காக அவர் கற்பித்த எளிமையான அறிமுகம் ஒரு மாபெரும் முன்னுதாரணம் என்றனர்.

தமிழகத்தில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவத்தை அறிந்தவர்கள் அவர்களில் மிகச்சிலரே. ஓர் எளிய அறிமுகமே நம் ஆலயங்களை, நம் அன்றாடச் சடங்குகளை முற்றிலும் புதிய ஒளியில் காட்டிவிடும் என்பதை கற்றவர்கள் உணரமுடியும். நம் வாழ்க்கையின் கோணமே அதனூடாக மாறிவிடும்.

இது மதக்கல்வி அல்ல. ஆசாரப்பயிற்சியும் அல்ல. இது முற்றிலும் தத்துவக் கல்வி. எந்த தத்துவத்திலும் ஈடுபாடுள்ளவர்கள் கற்கலாம். எல்லா தத்துவமரபையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் பங்கேற்கலாம்

நாள் அக்டோபர் 25, 26 மற்றும் 27 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு [email protected]

 

 

 இடங்கள் நிறைவுற்றவை

 

ஜெர்மானிய தத்துவ முகாம்

நடத்துபவர்: அஜிதன்

ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)

இடங்கள் நிறைவுற்றன

இந்திய தத்துவம் முதல் வகுப்பு
செப்டெம்பர் 13,14 மற்றும் 15 (வெள்ளி சனி ஞாயிறு)

 

முந்தைய கட்டுரைவிபாசனா, கடிதம்
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா, கடிதம்