செயலின்மையிலிருந்து ஏன் விடுபடவேண்டும்?

செயலின்மை என்பது நம்மைச் சூழ்ந்திருக்கும் பெரும் சேறு. நம் சமூகம் மெல்ல மெல்ல அதில் மூழ்கி வருகிறது. அச்சேறு சமூகவலைத்தளங்களாக, கணிப்பொறி விளையாட்டாக, சூதாட்டமாக, பொருளற்ற பூசல்களாக நம்மை ஆட்கொள்கிறது. நம்மை நாமே பிடுங்கி விடுவித்துக்கொண்டாலொழிய மீட்பில்லை. செயலற்ற உள்ளம் நோயை உருவாக்கும். அழுகிய ஓர் உறுப்பு மொத்த உடலுக்கும் கிருமியை அனுப்புவதுபோல. அதை கடந்தேயாகவேண்டும்.

 

முந்தைய கட்டுரைகற்பதன் அலகுகள்
அடுத்த கட்டுரைபறவை பார்த்தல், கடிதம்