அன்புள்ள ஜெ,
இன்றைய காணொளி உலகில் நம் குழந்தைகள் எளிதாக காணொளிக்குள் சென்றுவிடுகிறார்கள். எதையுமே அவர்களால் தொடர்ச்சியாகக் கவனிக்க முடியவில்லை. கவனம் குவியாமல் வாசிக்கமுடியாது. ஆகவே இன்று 90 சதம் பிள்ளைகளும் எதையும் வாசிப்பதில்லை. பள்ளிகளிலும் அதற்கு ஏற்ப காணொளி அசைன்மெண்டுகளை கொடுத்து அதன் வழியாகச் சிலவற்றை கற்றுக்கொள்கின்றன. கம்யூட்டர் கல்வியில் உள்ள பிராப்ளம் சால்விங் கல்விக்கு அதுவே போதுமானதாக உள்ளது. அக்கவுண்டிங் வேலைக்கும் அது போதும். ஆனால் இலக்கியம் ஹ்யூமானிட்டீஸ் கல்விக்கு அது போதாது. இன்றைக்கு தமிழகத்திலே உள்ள ஆங்கில இலக்கியம் படிக்கும் குழந்தைளைக் கவனியுங்கள் என்ன பிரச்சினை என்று தெரியும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 50000 குழந்தைகள் வரை ஆங்கில இலக்கியம் படிக்கின்றார்கள். ஆனால் ஆங்கிலம் வாசிக்கும் வழக்கமுள்ள குழந்தைகள் இதில் 50 பேர் கூட இல்லை. இதுதான் பரிதாபமான நிலைமை. பெரும்பாலான குழந்தைகள் இணையத்தில் நகல் செய்து எதையாவது எழுதிவிடுகிறார்கள். 90 மார்க் வரை வாங்கும் குழந்தைகள்கூட தொடர்ச்சியாக 10 பக்கம் படிக்க முடியாத நிலை.
ராமச்சந்திரன் கே.ஆர்.