அன்புள்ள ஜெ
நான் தத்துவ அறிமுக வகுப்பில் மட்டும்தான் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் அது உருவாக்கிய அதிர்வு மிகப்பெரியது. நான் என்னை லாஜிக்கலாக யோசிப்பவன் என்றுதான் நினைத்திருந்தேன். அது எவ்வளவு பெரிய பிழை என அங்கே வந்தபிறகுதான் தெரிந்தது. நான் லாஜிக் என நினைத்திருந்தது எல்லாமே தகவல்களை வரிசையாகச் சொல்வது மட்டும்தான். மொத்தப்பார்வையை தர்க்கபூர்வமாக அமைத்துக்கொள்ள நான் கற்கவே இல்லை என்பதை தத்துவ வகுப்புதான் காட்டியது. தத்துவம் என்றால் வாழ்க்கையையே தர்க்கபூர்வமாக அறிவதற்கான அடிப்படைப் பயிற்சி என அறிந்துகொண்டேன். உண்மையில் இன்றைக்கு நம் கல்விமுறையில் அடிப்படைத் தத்துவக்கல்வி கண்டிப்பாக இருந்தாகவேண்டும். நமக்கு எத்தனை படித்தாலும் தர்க்கசிந்தனையே இல்லாமலிருப்பதற்கான காரணமே தத்துவப்பயிற்சி இல்லாமலிருப்பதுதான்.
ஆனந்த்