ஜெயமோகன் அவர்களுக்கு,
நேரடி வகுப்புகள் ஏன் அத்தியாவசியத்தேவை என்பது உண்மை.கார்ல் பாப்பரின் நவீன அறிவியல் இலக்கணத்தை சிந்தனை செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தர்க்கத்தின் நான்கு படிநிலைகள் நம்முடைய சிந்தனையை சரியா ,தவறா என நிரூபிக்க, மறுக்க உதவும். எனினும்அதைப்பற்றிய புரிதல் முக்கியம்.Active listening தேவை.கவனம் தேவை.
Orient என்ற வார்த்தையின் விளக்கம் வித்தியாசமாக இருந்தது.ஒருசமயம் ஆங்கிலேயார்கள் தமிழை Oriental language என்றே அழைத்தார்கள் பட்டமும் கல்லூரிகளில் B.O.L Bachelor of Oriented Language, ,என்றே கல்லூரிகளில் வழங்கப்பட்டது.எந்த சிந்தனைகளையும் Pre conditioned mind மற்றும் Prejudicial attitude வழியாக பார்த்தால் அது புரிதலே அல்ல.
தங்கள் காணொளி ஒரு தத்துவ வகுப்பு ,அந்த கருத்தை மறுப்பதும் ஏற்பதும் இன்னொரு சிந்தனைவாதிக்கு சவால்.நிரூபிப்பதற்கு மீண்டும் கார்ல் பாப்பரின் நவீன அறிவியல் இலக்கணத்தை தற்காலிமாக உபயோக படுத்தலாம் அதுவே உண்மையாகிவிடாது.அதன் மீது வேறு தர்க்கத்தை வைத்து பொய் எனவும் நீரூபிக்கலாம் மொத்தத்தில் ஒரு தனிநபரின் எண்ணத்தை கருத்தை ஏற்று கொள்ள சிந்தனைகள் அல்ல சிந்திக்க வேண்டும் என்ற முத்தாய்ப்பான வார்த்தை அருமை.புரிதல் பற்றிய வகுப்புகளை நேரடியாக முழுமையறிவு தத்துவ வகுப்புகளில் நடத்தி இளைய தலைமுறையின் புரிதல் மற்றும் சிந்தனைகளை மேம்படுத்த வேண்டுகிறேன்.
தா.சிதம்பரம்.