ஜெயமோகன் அவர்களுக்கு.
ருட்கர் பிரக்மான் புத்தகம் நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி.தமிழில் நாகலெட்சுமி சண்முகம் “மனித குலம் நம்பிக்கை ஊட்டும் வரலாறு.”என்ற புத்தகத்தை அறிமுகபடுத்தியதற்கும் நன்றி.
நாகலெட்சுமி சண்முகம் ஔவை சண்முகத்தின் வழித்தோன்றல் என்பது புதிய செய்தி.செமிடிக் பார்வை பற்றிய விளக்கம் கண்களை திறக்க வைத்தது.மனிதர்கள் இயல்பாகவே பாவம் செய்தவர்கள் என்ற எண்ணம்.அவநம்பிக்கை.மனிதன் கட்டற்றவன் அதனால் அவன் வீழ்ந்தான் என்பது எதிர்மறை சிந்தனை.சிக்மண்ட் பிராய்டு கருத்தையும் நாம் கண்டு கொண்டோம்.ஐரோப்பியமனத்தையும் கீழை மனத்தையும் பற்றிய ஆராய்ச்சி ஒரு விழிப்புணர்வை கொடுத்தது .மனிதன் சபிக்கப்பட்டவன் அல்ல.மனித இனத்திற்கு நல்ல குணங்களும் உண்டு.அத்துவைதம் அதைத்தான் கூறுகிறது.Compassion என்ற கருணைகுணம்தான் மனித குலத்தை வாழ வைக்கிறது.
Communication மூலம்தான் Compassion நடக்கிறது. மனித குல நன்மையின் வெளிப்பாடுதான் கருணையின் வெளிப்பாடு. நமது நாட்டின் தத்துவம் நம்மை பெருமைப் படவைக்கிறது .ஒருவேளை இந்திய தத்துவம் இல்லாதிருந்தால் மனித குலம் இதற்கு முன்னால் அழிந்திருக்குமோ என்ற எண்ணம் கூட எழுகிறது.ஞானத்தை நம்புவோம். நல்ல மனிதகுலம் தளைக்கட்டும்.
தா.சிதம்பரம்.