தனிமை, ஏகாந்தம்- கடிதம்

அன்புள்ள ஜெ,

தனிமை, ஏகாந்தம் வேறுபாடு பற்றி நீங்கள் முன்னரும் பேசியிருக்கிறீர்கள். ஆண்டனி ஸ்டோர் பற்றி எழுதியுமிருக்கிறீர்கள். ஆனால் திரும்பத் திரும்ப பேசியாகவேண்டிய ஒரு சூழல் இன்று உள்ளது. இன்றைய மக்களில் பெரும்பாலானவர்கள் தனிமையில்தான் வாழ்கிறார்கள். இன்று சமூகம் என்ற ஒன்று இல்லை. தனிமனிதர்கள்தான் உள்ளனர்.

நான் கிராமத்தில் வாழ்ந்தபோது கிராமம் என்ற ஒன்றையே கண்ணால் பார்க்கமுடியும். ஒவ்வொரு நாளும் சமூகம் என்பதைப் பார்க்கமுடியும். இன்று நகரங்களில் தெரு என்னும் அமைப்புகூட இல்லை. சொசைட்டி என்று சொன்னால் அது ஒரு கட்டிடத்தொகுப்பு, அப்பார்மெண்ட் என ஆகிவிட்டது. ஆனால் அங்கேயும் ஒருவரோடொருவர் எந்த தொடர்பும் இல்லை. குடும்பங்களே தனித்தனியாக வாழ்கின்றன.அந்தக் குடும்பங்களில் ஒருவரோடொருவர் இணைப்பும் உரையாடலும் இல்லை. அவரவவர் அவரவர் உலகில் வாழ்கிறார்கள்.

உலகம் மிக நெரிசலாக ஆகியுள்ளது. ஆனால் அனைவரும் தனியாக இருக்கிறார்கள். தனிமையை கையாள்வது எப்படி  என்பது மிக முக்கியமான கேள்வி இன்று. அதற்கு எந்தவகையான தனிமை நம்முடையது என்று நாம் அறிந்திருக்கவேண்டும்.

ராம்குமார்

முந்தைய கட்டுரைஇரண்டாம்நிலை யோகம், கடிதம்