Jeyamohan introduces Hindu philosophy in English. A previous group of students has already completed this course, and the current group is the second one.
This class provides an overall introduction to Hindu philosophy and emphasizes the spiritual essence of Hindu wisdom. Designed for beginners, it promises an emotional and engaging experience.
The teaching method focuses exclusively on a philosophical approach and maintains a strictly nonreligious perspective. This approach does not involve any rituals or customs. It represents a modern way of teaching.
This might be the only institution that offers such an inclusive and contemporary outlook on Hindu philosophy.
அறிவிக்கப்பட்ட வகுப்புகள்- இடமிருப்பவை
தில்லை செந்தில்பிரபு நடத்தும் தியானம்– கவனக்குவிப்புப் பயிற்சி வகுப்புகள் இன்று மிகவும் புகழ்பெற்றுள்ளன. அவை மனஒருமை, அன்றாடவாழ்க்கையில் அமைதி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை
அவை தொடங்கப்பட்டபோது அவற்றின் நடைமுறைப் பயன் என்பது கவனக்குவிப்பாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. இன்றைய அன்றாடவாழ்க்கையில், கல்வியில் கவனச்சிதறல் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில் இப்பயிற்சிகள் மிகச்சிறந்த தீர்வை அளிப்பதை பங்கேற்பாளர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு அதற்கேற்ப இப்பயிற்சிகள் மேம்படுத்தப்பட்டன.
கவனச்சிதறலின் உடனடி விளைவு சீரான துயிலின்மை. துயிலின்மை எதையும் ஒருங்கிணைந்த உள்ளத்துடன் செய்ய முடியாமலாக்குகிறது. உடலில் பல்வேறு வலிகள் உண்மையில் உள்ளம் சமநிலையில்லாமல் இருப்பதனால் வருபவை. குறிப்பாக தலைவலிகள், கழுத்து வலிகள், முதுகுவலிகள். தியானமும்- யோகமும் கலந்த இந்த பயிற்சிமுறைகள் அதற்கு மிக உகந்த தீர்வுகள்.
ஒரு தியான வகுப்பு ஓரு நல்லாசிரியனால் நடத்தப்படவேண்டும். பயில்பவர் ஆசிரியருடன் தொடர்பில் இருக்கவேண்டும். ஆசிரியன் அந்த மாணவரை அறிந்திருக்கவேண்டும். ஆகவேதான் இவை தனிப்பட்ட முறையிலான பயிற்சிகளாக நடைபெறுகின்றன.
தில்லை செந்தில் பிரபு அவருடைய ஆனந்த சைதன்யா அறக்கட்டளை வழியாக இப்பயிற்சிகளை எளியநிலை கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் இப்போது கொண்டுசெல்கிறார்.
ஜெயமோகன் இந்திய தத்துவ வகுப்புகள்
இந்திய தத்துவம் ஆறாவது வகுப்பு
நாள் பிப்ரவரி 6,7 மற்றும் 8
இந்து தத்துவம் இரண்டாம் வகுப்பு
இந்து தத்துவத்தின் இரண்டாவது வகுப்பு இது. முதல் வகுப்பை முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
(இந்த இரண்டாம் நிலை வகுப்பு தமிழில் நிகழும். இந்து தத்துவம் இன்னொரு முதல் வகுப்பு ஆங்கிலத்தில் பிப்ரவரியில் நிகழும். அதன்பின்னர் இந்து தத்துவம் இரண்டாம் வகுப்பு ஆங்கிலத்தில் மார்ச் மாதம் நிகழும்)
நாள் பிப்ரவரி 13, 14 மற்றும் 15
இந்து தத்துவம் ஆறாவது வகுப்பு -இரண்டாம் நிலை
இந்து தத்துவத்தின் ஆறாவது வகுப்பின் முதல்நிலை மட்டும் ஒரு வகுப்பு அல்மோராவிலும் இன்னொன்று பிப்ரவரி முதல் வாரம் வெள்ளிமலையிலும் நிகழ்ந்தது. இந்த வகுப்பு அவ்விரு வகுப்புகளின் தொடர்ச்சி. இது ஆறாம் வகுப்பின் இரண்டாம் நிலை. பிரம்மசூத்திரம் முழுமையாக்கப்படும்
நாள் பிப்ரவரி 27 , 28 மற்றும் மார்ச் 1
For contact [email protected]













