மேற்கத்திய கலைமரபு (ஓவியம், புகைப்படம்) ஏ.வி.மணிகண்டன்  -அறிவிப்பு

மேற்கத்திய கலைமரபு (ஓவியம், புகைப்படம்) ஏ.வி.மணிகண்டன்  

கலைச்சிந்தனையாளரும், புகைப்பட நிபுணருமான ஏ.வி.மணிகண்டன் நடத்தும் மேற்கத்தியக் கலைமரபு வகுப்பு நான்காம் முறையாக நடைபெறுகிறது. நான்காவது அணி மாணவர்கள் இடம்பெறுகிறார்கள். முன்பு நடந்த வகுப்புகளில் பங்குகொண்டவர்களில் பலர் அவர்கள் வாழ்க்கையின் இன்னொரு தொடக்கம் என்றே எழுதியிருக்கிறார்கள். அந்த வகுப்புகளின் மறு தொடர்ச்சி இது.

இது ஓவியப்பயிற்சி அல்ல. ஓவியம்- காட்சிக்கலையின் அழகியல் என்ன, அதிலுள்ள வெவ்வேறு கலைமரபுகள் என்னென்ன என்பதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இது. ஒரு நவீன மனிதன், இன்றைய சமகால உலகில் புழங்குவதற்கேகூட இந்தப் பயிற்சி அவசியமானது. ஓர் இல்லத்தை உள்ளலங்காரம் செய்வதை முடிவெடுக்க, ஒரு கட்டிடத்தின் அமைப்பை புரிந்துகொள்ள,ஓர் ஆடையை முடிவுசெய்ய இன்று ஒருவருக்கு அடிப்படை அழகியல் பயிற்சி தேவையாகிறது. அது நம் கல்வியமைப்பினூடாக எங்குமே அளிக்கப்படுவதில்லை. இது அதற்கான ரசனைப்பயிற்சி. கலையின் தத்துவத்துடன் இணைத்து இப்பயிற்சி அளிக்கப்படுகிறது

நாள் ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டெம்பர் 1 கலந்துகொள்பவர்கள் தொடர்புகொள்ளலாம்

[email protected]

——-         ————     —————————-

ஓவியப்பயிற்சிக்குப் பின்…ஒரு கடிதம்  

ஓவியம்- கடிதம்

கண்களைக் கண்டடைதல், கடிதம்

சித்திரம் பயில்தல், கடிதம்

ஓவியத்தினூடாக அறிதல், கடிதம்

ஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்

ஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்

ஓவியங்களை அறிதல்- கடிதம்

==============================================

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்: இடமிருப்பவை

இஸ்லாமிய மெய்யியல் – இலக்கிய அறிமுகம்

இந்தியப் பண்பாட்டின் ஓர் அம்சமாக இஸ்லாம் பலநூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால் இஸ்லாம் குறித்த புரிதல் இஸ்லாமியர் அல்லாதவர்களிடமில்லை. அப்புரிதல் இல்லாமல் இந்திய வாழ்வில் ஒருமைப்பாடு அமையாது. நமக்குத்தேவை ‘சகிப்புத்தன்மை’ அல்ல ‘புரிதல்’.

இஸ்லாமின் மெய்யியல்களில் ஒன்றான சூஃபி மரபு இந்திய ஆன்மிகச் சிந்தனையில், இந்திய கலைகளில் (குறிப்பாக இசையில்) மிகப்பெரிய பங்களிப்பாற்றிய ஒன்று. அதை உணராமல் இந்திய இலக்கியத்தையும் கலையையும் முழுதறிய இயலாது.

இஸ்லாமிய அரசியல்வாதிகளிடமிருந்து எவரும் அப்புரிதலை அடையமுடியாது, அவர்கள் பிரிவினையையே முன்வைப்பார்கள். இஸ்லாமிய மெய்யியலை அறிந்தவர்களிடமிருந்தே அப்புரிதலை அடையமுடியும். இன்று வெறுப்பும் பிரிவினைநோக்கும் ஓங்கியுள்ள சூழலில் ஆழ்ந்து அறிதலே இச்சூழலுக்கு எதிரான மெய்யான எதிர்வினையாக அமையும்.

இஸ்லாமியர்கூட இன்று இஸ்லாமை இரண்டு வகையிலேயே அறியமுடியும். மதம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும். மெய்யியல் சார்ந்து அறிய அதற்கு மட்டுமே உரிய வகுப்புகள் மிக அரிது.

தமிழ்ப்பண்பாட்டின் முக்கியமான ஒரு கூறு தமிழ் இஸ்லாம். தமிழின் காவியமரபு, தமிழின் சிற்றிலக்கிய மரபு இரண்டிலும் பெரும்பங்களிப்பு கொண்டது. அதை தமிழிலக்கிய வாசகர், தமிழ்ப்பண்பாட்டு ஆர்வலர் அறிந்திருக்கவேண்டும்.

கவிஞர், இஸ்லாமிய ஆய்வாளர் நிஷா மன்ஸூர் நடத்தும் இவ்வகுப்பில் இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பின்னணி, அதன் மெய்யியல், அதன் உலகளாவிய சூஃபி மரபு, தமிழ் சூஃபி இலக்கியம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

தொடர்புக்கு [email protected]

ஆலயப்பயிற்சி, இரண்டாம் நிலை

இது வரை நிகழ்ந்த ஆலயப்பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டவர்களுக்கான அடுத்த நிலை பயிற்சி இது. இதில் ஓர் ஆலயத்தில் மேற்கொண்டு கற்கவேண்டியவை, கவனிக்கவேண்டியவை எவை என ஆசிரியர் பயிற்றுவிப்பார்.

அத்துடன் இக்கல்வியை எப்படி நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக்குவது என்றும் கற்பிப்பார். ஓர் ஆலயத்தை எடுத்துக்கொண்டு முழுமையாக அதை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி எப்படி ஒரு சிறு நூலாக எழுதுவது என்பது ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்பிக்கப்படும்.

சிறு குழுவாக ஆகி இதை செய்வது செய்பவர்களுக்கும் ஆழ்ந்த கவனத்தையும், ஆலயக்கலை சார்ந்த பயிற்சியையும் அளிக்கும். நம் ஆலயங்ளைப் பதிவுசெய்யும்  பெரும்பணியையும் தொடங்கியவர்கள் ஆவோம்

நாள் ஆகஸ்ட் 16 17 மற்றும் 18 (வெள்ளி, சனி, ஞாயிறு)

(ஐந்து இடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன)

[email protected]

 

  இடங்கள் நிறைவுற்ற நிகழ்வுகள்

 

தத்துவம் முதல் வகுப்புஆகஸ்ட் 2,3 மற்றும் 4 (வெள்ளி, சனி, ஞாயிறு) அன்று அறிவிக்கப்பட்டிருந்த தத்துவம் முதல் வகுப்புக்கான இடங்கள் நிறைவுற்றன.

அடிப்படை யோகப்பயிற்சி

நாள் ஜூலை 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு)

(இடங்கள் நிறைவுற்றன)

ஜெர்மானிய தத்துவ முகாம்

ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)

இடங்கள் நிறைவுற்றன

இந்திய தத்துவம் முதல் வகுப்பு
செப்டெம்பர் 13,14 மற்றும் 15 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்வின் இடங்கள் நிறைவுற்றன. செப்டெம்பர் வகுப்பின் இடங்களும் நிறைவுற்றன.

வரவிருக்கும் நிகழ்வுகள்

 

வி.அமலன் ஸ்டேன்லி நடத்தும் பௌத்த மெய்யியல்- விபாசனா அமர்வுகள் மீண்டும் நிகழ்கின்றன.

நாள் செப்டெம்பர் 6,7 மற்றும் 8 (வெள்ளி, சனி, ஞாயிறு)

 

தமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி

மரபின் மைந்தன் முத்தையா மரபிலக்கியத்தில் முறையான பயிற்சியும் நவீன இலக்கிய வாசிப்பும் உடையவர். அவர் நடத்தும் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்  நிகழும். சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரையிலான தமிழ் இலக்கிய மரபின் தொடர்ச்சியும் அவற்றை வாசிக்கும் முறையும் கற்பிக்கப்படும். இது  இலக்கணப்பயிற்சி அல்லது தகவல்பயிற்சி அல்ல. முழுக்க முழுக்க இலக்கிய ரசனைப் பயிற்சி மட்டுமே

செப்டெம்பர் மாதம் 20 22 மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு)

முந்தைய கட்டுரைபைபிளின் மெய்யியல் – கடிதம்
அடுத்த கட்டுரைவீடும் வகுப்பும், கடிதம்