ஒருமை- கடிதம்

மீண்டும் ஒரு மூளை சொடுக்கு கிடைத்தது. நன்றி.திருஷ்டாந்தம்,உவமானம் சமஸ்கிருத பாடத்தை எழுமையாக விளக்கினீர்கள் ஒரு மானுடவியல் மாணவன் புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான கருத்துதான் Compassion. மனித குலத்தை வளர்த்து எடுத்ததுதான் இந்த Compassion என்ற கருணை ஆகும். தனிப்பெருங்கருணை என்று வள்ளலார் கூறியதும் இந்த மானுட கருணையைத்தான்
www.Sapien.org என்ற Reference மேலும் என்போன்ற மானுடவியல் மாணவர்கள், ஆய்வாளர்களுக்கு உதவும். கருணையே வடிவான மனிதனே மனித சமூகத்தை தன்னுடைய நோய்காலங்களிலும், விபத்து காலங்களிலும் உதவி இருக்கிறான் என்பதை மேலைநாட்டு மானிடவியலாளர்கள் ஆராய்ந்து கண்டு பிடிக்கப்பட்டது நமக்கு மனித குலத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்கிறது .Man is not an island, He is a social being. என்று நான் சமூகவியல் படிக்கும் காலங்களில் படித்த ஆரம்ப கால பாடங்கள் ஞாபகம் வருகிறது. கருணையே வடிவானவன் கடவுள் என்பது மனிதனின் உயர்குணமான கருணையை குறிக்கத்தான்.   இந்த கருத்தை கையாண்ட திருஷ்டாந்தமும், உவமானமும் அருமை.நீங்கள் ஒரு தத்துவ ஆசிரியர் என்பதில் ஐயமில்லை. அடிக்கடி எங்கள் மூளையை சொடுக்குங்கள். இல்லையென்றால் மரத்து போய்விடும் காரணம்.சமூக வலைதள கருத்துக்களை  கேட்டு கேட்டு மரத்து போய்விட்ட மூளைக்கு ஒரு கொட்டு (சொடுக்கு)தேவை.
தா.சிதம்பரம்.
முந்தைய கட்டுரைபறவைகளுடன் இருத்தல்
அடுத்த கட்டுரைகுழந்தைகளுக்கு மேலும் பயிற்சிகள்