வாசித்தல், சிந்தித்தல், விவாதித்தல்- பயிற்சி.

 

இன்றைய செயற்கைநுண்ணறிவு காலகட்டத்தில் தகவல்கள் பொருளிழந்துகொண்டிருக்கின்றன. தகவல்களை தொகுத்து அளிப்பது இன்று மென்பொருட்களால் எளிதாகச் செய்யப்படுகின்றன. ஆனால் நம் கல்விமுறை முழுக்க முழுக்க தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அது நமக்கு தகவல்களை நினைவில்கொள்ள மட்டுமே கற்பிக்கிறது. விளைவாக நாம் தொழில்நுட்பத்தால் விரைவாக தகுதியற்றவர்களாக ஆக்க்கப்படுகிறோம்.
இன்று நாம் நம்மை கூடுதல் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றால் தர்க்கபூர்வமாக சிந்திப்பது அவசியம். வாசிப்பவற்றை தர்க்கபூர்வமாக தொகுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை பற்றி தர்க்கபூர்வமாக யோசிக்கவேண்டும். அவற்றை முன்வைத்து விவாதிக்கவேண்டும். அவற்றின் வழியாக நாம் அசலாக யோசிக்க வேண்டும். அனைவரும் யோசிப்பவற்றை இனிமேல் மென்பொருட்கள் செய்யும். நமக்கேயான சிந்தனையும் கற்பனையையும் மட்டுமே நம்மை தகுதி கொண்டவர்களாக ஆக்கும்.
தர்க்கபூர்வமாக கற்பது, சிந்திப்பது, விவாதிப்பதற்குரிய வழிகள் பல உள்ளன. பொத்வான தர்க்கம், குறுக்குவாட்டு தர்க்கம், அறிவியல் தர்க்கம், கற்பனைசார்ந்த தர்க்கம் என பலவகை. அவற்றைக் கற்பிப்பதற்கான ஒரு வகுப்பை ஈரோடு வழக்கறிஞர் கிருஷ்ணன் நடத்துகிறார்.
இந்த வகுப்பு தர்க்கபூர்வ சிந்தனைக்கான ஓர் அறிமுகம் மட்டுமே. ஆனால் இவ்வகுப்பினூடாக நாம் தர்க்கம் என்பதையே அறியாமல் ஒரு வகையான தன்னிச்சையான யோசிப்பையே சிந்தனை என நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்று காட்டும். அது ஒரு பெரிய திறப்பாக அமையும். மேலும் தர்க்கங்களை கற்றுக்கொள்ளச் செய்யும். நம் சிந்தனையையே புதியதாக ஆக்கும். இன்றைய செயற்கைநுண்ணறிவுக் காலகட்டத்திற்கு மிக அவசியமான இக்கல்வி தொழில், வணிகம், மக்கள்தொடர்பு, ஊடகம் ஆகிய துறைகளில் செயல்படுபவர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்றியமையாதது.
கிருஷ்ணன் புகழ்பெற்ற வழக்கறிஞர். முறையான தர்க்கக் கல்வி அடைந்தவர். இலக்கியவாசகர், பயணி. மாணவர்களுக்கான நவீன அறிவியல்- சிந்தனைக் கல்வியை அளிக்கும் முனை இயக்கத்தை ஒருங்கிணைப்பவர்.

நாள் ஏப்ரல் 24 25 மற்றும் 26

For contact [email protected]

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் இடமிருப்பவை

தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இப்போது மிகப்புகழ்பெற்றவை. இன்றைய வாழ்வில் நாம் அடையும் சலிப்பு,அதன் விளைவான உளச்சோர்வு எல்லாவகையிலும் நம்மைச் சூழ்ந்துள்ளது. சட்டென்று செயலின்மை நோக்கி அது நம்மை தள்ளிவிடும்.

செயலின்மை மிகச் சிக்கலான ஓர் உளநிலை. அது உண்மையில் செயலின்மை என்றே நமக்கு தெரிவதில்லை. துளித்துளியாக, தொடர்ச்சியற்று எதையேனும் செய்துகொண்டு முழுநாளையும் கடத்துவோம். பரபரப்பாக ஏதோ செய்வதாகவே நினைத்துக்கொள்வோம். ஆனால் ஆக்கபூர்வமான விளைவை உருவாக்காத எச்செயலும் உளச்சோர்வின் வெளிப்பாடுதான் என நாம் அறிவதில்லை. நம் கவனம் குவியாததனாலேயே அவ்வாறு செய்துகொண்டிருக்கிறோம்.

அதேபோன்று மிகப்பெரியவையும் அசாத்தியமானவையுமான திட்டங்களையும் கனவுகளையும் சொல்லிக்கொண்டிருப்பதும் ஒருவகை செயலின்மையின் வெளிப்பாடுகளேயாகும். அனைத்துச் செயல்கள் மீதும் அவநம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும், அதை தர்க்கபூர்வமாகச் சொல்லிக்கொண்டிருப்பதும் இன்னொரு வகைச் செயலின்மை. இவை நம் செயலின்மையை நமக்கு நாமே மறைக்க நாம் போடும் உளநாடகங்கள்.

மிகத் தொடக்கநிலையிலேயே இந்த தேக்கநிலையை தொடர்ச்சியான எளிய பயிற்சிகள் வழியாக களைந்துவிட முடியும். அதற்கு முறையான வழிகாட்டுதல்கள் தேவை. ஊக்கம் கொண்ட ஒரு சுற்றமும் இன்றியமையாதது. தில்லை செந்தில் பிரபுவின் பயிற்சிகள் அவ்வகையில் மிக உதவியானவை.

தில்லை செந்தில் பிரபு இந்த தளத்தில் 25 ஆண்டுகள் பயிற்றுநராகப் பணியாற்றிய பின்னணி கொண்டவர். நவீன உளவியலையும், மரபான தியான- யோக முறைகளையும் கலந்த  உளக்குவிப்பு- செயலூக்கப் பயிற்சி அவருடையது.

மீண்டும் இப்பயிற்சிகள் வரும் ஏப்ரல் 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.

தொடர்புக்கு [email protected]

வரவிருக்கும் நிகழ்வுகள் 

பறவை பார்த்தல் வகுப்புகள்

முழுமையறிவு சார்பில் மாணவர்களுக்கான பறவை பார்த்தல் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்திவருகிறோம். இன்றைய குழந்தைகளின் முதன்மையான சிக்கல் வலையடிமைத்தனம்தான். இணையவிளையட்டுக்கள், காணொளிகள், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றன. மாணவர்களின் உலகம் கூட்டானது, ஆகவே பொதுப்போக்கு அவர்களை அடித்துச்செல்கிறது. அதில் இருந்து தப்புவது எளிதல்ல. பெற்றோரின் கண்டிப்போ ஆலோசனையோ அதற்கு உதவுவதில்லை.
வளர்ந்த நாடுகளில் அதற்கு சிறந்த வழியாகக் கண்டடையப்பட்டு தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுவது நேரடியான செயல்கள்தான். காடுகளில் உலவுவது, அரிய கற்களையொ பிற இயற்கைப்பொருட்களையோ சேகரிப்பது போன்ற பல செயல்கள் அதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பறவை பார்த்தல்.
பறவைபார்த்தல் காட்டுக்குள் நேரடியாகச் செல்வதற்கான பயிற்சியை அளிக்கிறது. காட்டுக்குள் செல்வது புலன்களை ஆட்கொள்ளும் அனுபவம் ஆதலால் அது நம் குழந்தைகளை ஆக்ரமித்திருக்கும் செல்பேசி அடிமைத்தனத்திற்கு சிறந்த மாற்று. பறவைபார்த்தல் பயிற்சி பொறுமையாக அமர்ந்திருப்பது, கூர்ந்து கவனிப்பதற்கான மனநிலையை உருவாக்குகிறது.
அத்துடன் பறவை பார்த்தல் வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஒரு பழக்கமாகவும் ஆகிறது. உலகு முழுக்க பரவியிருக்கும் பறவை பார்த்தல் குழுக்களுடனான உறவு உருவாகிறது. அது முழுமையாகவே நம்மை ஈடுபடுத்த உதவுகிறது. எங்கள் பறவை பார்த்தல் வகுப்புகளில் பங்குகொண்டவர்கள் இன்று பல பறவைபார்த்தல் குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பறவைபார்த்தல் மகத்தான ஓர் அனுபவ உலகை விரித்தளிக்கிறது. இயற்கையுடனான உறவை உருவாக்குகிறது. தியானம்போன்ற உளக்குவிப்பு அனுபவத்தை அளிக்கிறது. உளச்சோர்வு போன்ற சிக்கல்கள் கொண்டவர்களுக்கான அரிய மீள்வழி அது.
மீண்டும் இப்பயிற்சிகள் வரும் மே மாதம்  1, 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.
For contact [email protected]

 

தொடர்புக்கு [email protected]

 ஓவியம் , வடிவமைப்பு வகுப்புகள்

இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில் ஓவியம்- வடிவமைப்ப்ப் பயிற்சிகள் அனைவருக்கும் தேவையாகின்றன. இன்று இணையப் பக்க வடிவமைப்பு முதல் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிடுவது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு வடிவமைப்புத் திறன் தேவையாகிறது. குறிப்பாக மாணவர்களுக்கான ஓர் அடிப்படைப் பயிற்சியாகவே இது ஆகியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக் காலகட்டத்தில் எவர் சுயமாக அதைச் செய்கிறாரோ அவர் மட்டுமே கவனம் ஈர்க்கமுடியும் என்பதே இன்றைய நிலைமை.

அதன்பொருட்டு மாணவர்களுக்கான ஓர் ஓவியம்- வடிவமைப்புப் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைக்கிறோம். ஓவியர் லலிதா ராகவன் கோட்டோவியம் வரைதல், நீர்வண்ண ஓவியம் வரைதல் சார்ந்த அடிப்படைப் பயிற்சியை அளிப்பார். கீதா செந்தில்குமார் விளம்பரப் பக்க வடிவமைப்பு,  கதைச் சட்டக வடிவமைப்பு, நூலட்டை வடிவமைப்பு, இன்ஸ்டாபோஸ்டுக்கான பக்க வடிவமைப்பு முதலிய நவீன வடிவமைப்புப் பயிற்சியை அளிப்பார். மூன்றுநாட்கள் தங்கி பயில்வது இத்துறையில் ஓர் ஆரம்ப அறிமுகத்தை அளிக்கும். ஓவிய ஆர்வமுள்ளவர்கள் மட்டுமன்றி பிறரும் கலந்துகொள்ளலாம். குறிப்பாக மாணவர்களுக்கான ஒரு பயிற்சி. இவ்வகுப்புக்குப்பின் இந்த ஆசிரியர்களுடன் நேரடியான பயிற்சியையும் பெறலா,.

நாள் மே 8, 9 10

For contact [email protected]

தாவரங்களைப் பார்த்தல் வகுப்புகள்

பேராசிரியர் லோகமாதேவியின் தாவர அறிமுக வகுப்புகள் மாணவர்கள் நடுவே தீவிரமான உணர்ச்சிகர ஈடுபாட்டை உருவாக்கியவை. இவை நம்மைச் சுற்றியுள்ள தாவரங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன. நேரடியாக தாவரங்களை காட்டிக்கற்பிக்கும் வகுப்பகள் இவை. உற்சாகமான எளிய பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் வழியாக செடிகள், மரங்களின் விந்தையான உலகை நமக்கு அறிமுகம் செய்கின்றன. மிகுந்த மனக்கிளர்ச்சியூட்டும் அறிதல் அனுபவமாக அவை அமைந்ததை  பங்கேற்றவர்கள் தொடர்ச்சியாக பதிவுசெய்துள்ளனர்.
நம்மைச் சுற்றியுள்ள தாவர உலகத்தை நாம் கவனிப்பதே இல்லை. கவனிக்க ஆரம்பித்தால் நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் ஒரு பிரபஞ்சமே திறந்துகொள்ளும். நம் அன்றாடத்தின் வெறுமையை முழுமையாகவே நீக்கி நம்மை திளைக்கவைப்பது அந்த அனுபவவெளி.
இன்றைய சூழலில் இணைய அடிமைத்தனத்திற்குள் சென்றுவிடும் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த மாற்றுவழி என்பது இயற்கையுடன் ஒவ்வொரு கணமும் இருந்துகொண்டிருக்கும் ஓர் அனுபவத்தை அளிப்பதுதான். ஓர் அறிவுத்துறைக்குள் மிக இளமையிலேயே சென்றுவிடும் குழந்தை, அறிதலின் இன்பத்தை அறியத் தொடங்கிய குழந்தை மட்டுமே நம்மைச்சூழ்ந்துள்ள பொழுதுபோக்கு மற்றும் சமூகவலைத்தள அடிமைத்தனத்தில் இருந்து வெளியேற முடியும். இப்பயிற்சி அதற்குரியது.
நாள் மே 15 16 மற்றும் 17
For contact [email protected]
முந்தைய கட்டுரைசலிப்பும் மீட்பும்