ஜெயமோகன் அவர்களுக்கு.
மீண்டும் மனித மேம்பாட்டுக்கு இலக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை சுட்டி காண்பித்ததற்கு நன்றி. இலக்கியங்கள் காலத்தை காட்டும் கண்ணாடி என்ற ஒரு சொலவாடை உண்டு.இலக்கியங்கள் வழியாக நாம் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்.அறிதலில் மூன்று முறைகளை அடிக்கடி வலியுறுத்துகிறீர்கள்.ஒன்று தர்க்கம்(Logic)இரண்டு உள்ளுணர்வு(Intuition) மூன்றாவது கற்பனை(Imagination) .இதில் கற்பனை சார்ந்த அறிவு இலக்கியம் என்பது உண்மை.Imagination is greater than knowledge என்ற ஐசக் நியூட்டன் என்ற அறிவியலாளரின் கூற்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது..
பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் இலக்கிய வகுப்புகளை கற்க மாணவர்கள் இல்லை.இலக்கியம் துணைப்பாடங்களாவே வைக்கப்பட்டிருக்கிறது.இலக்கிய வரலாறு தெரியாமல் நம்முடைய கலாச்சார வரலாறை தெரிந்து கொள்ள முடியாது.பல்வேறு நிகழ்த்து கலைகள்,நாட்டார் கலைகள் மூலம் இலக்கியங்கள் அடிமட்ட மனிதர்களும் புரிந்து கொள்ள நடைமுறைகள் ஒரு காலத்திலிருந்தது.தற்போதைய ஆசிரியர்களின் நிலையை சுட்டிகாட்டினாலும் கசப்பான உண்மை அதுதான்.இலக்கியம் இனிப்பு தடவிய மருந்தாகவே பாடதிட்டங்களில் தேர்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. உலகில் பலமொழிகளில் வெளிவந்துள்ள நாவல்களை தமிழிலும், பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்து இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பு தற்போது அதிகம்.
இலக்கியங்களைள படிக்க வேண்டும் .நிறைய இலக்கிய வாசகர்கள் உருவாக வேண்டும் என்ற உங்கள் எண்ணம், நம்பிக்கையை கொடுத்தாலும் அதை நடைமுறை படுத்த இலக்கிய வாசகர்கள் உருவாக வேண்டும்.கற்றல் இல்லாமல் கல்வி இல்லை.வாசிப்பு இல்லாமல் வாசகர்கள் இல்லை.தொழில்முறை கல்வி பெருகி விட்ட இந்த காலத்தில் இலக்கியம் ‘தத்துவம் ஆன்மீகம் பற்றி சிந்திக்க, வாசிக்க வாசகர்கள் குறைந்து வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.மனித உறவு சிக்கல்களுக்கும் வாசிப்பு இல்லாமையே காரணம். சம்பாஷணைகள் மனிதர்களிடையே குறைந்து விட்டன. பொருள்சார் சாம்பாஷணைகள்மற்றும் இயந்திர மொழி (Marketing and Machine language) கற்று கொடுக்க கல்வி நிறுவனங்கள் இங்கே ஆயிரம் முளைத்து வருகிறது. இலக்கிய விமர்சனங்கள் குறைந்து வருகிறது. இலக்கியங்கள் என்ற கல்வி மனித உறவுகளை, மனித மேம்பாட்டிற்கு தேவை என்பதில் ஐயமில்லை.
T.Chidambaram