அன்புள்ள ஜெ
நான் உங்கள் உரைகளில் அதிகம் கவனிப்பது தனிமை பற்றிய பேச்சுக்களைத்தான். என்னைப்போலவே பலநூறுபேர் அதை குறிப்பாகக் கவனிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் இன்றைக்கு கொஞ்சம் நுண்ணுணர்வும் அறிவும் கொண்டவர்கள் தனித்துவிடப்படுகிறார்கள். அலுவலகத்தில் விரட்டப்படுகிறார்கள். நட்புகளில் விலக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனவுகளும் கலைகளும் இலக்கியமும் மட்டுமே மிச்சமிருக்கின்றன.
ரா.கி