அன்புள்ள ஜெ
கலையின் வ்ழியாக இயற்கையை உணர்தல் என்னும் காணொளியைக் கண்டேன். அந்த இடமே அழகாக இருக்கிறது. உங்கள் வீட்டுக்கு மிக அருகே உள்ள இடம் என்று சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமாக இருந்தது. கலையிலக்கியம் என்பது இயற்கையின் பங்கு இல்லாமலானான் சூம்பிப்போய் வெறும் காமம் ஆக மாறிவிடும் என்பது ஒரு வாசகனாக என் அபிப்பிராயம். அதேபோல இயற்கையை இலக்கியம் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது என்ற உங்கள் கருத்து ஆச்சரியமாக இருந்தாலும் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. அழகான இடத்தில் இயல்பாக நின்றுகொண்டு அந்த உரையை நிகழ்த்தினீர்கள். நன்றி.
சிற்றரசு கி