ஜெயக்குமார் நடத்தும் இந்திய ஆலயக்கலை அறிமுக வகுப்புகள் இன்று உலகம் நோக்கி விரியத்தொடங்கியுள்ளன. அண்மையில் ஆஸ்திரியாவிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இந்தியச் சிற்பக்கலை- கட்டிடக்கலையை அறிமுகம் செய்யும் இவ்வகுப்புகள் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிய மிகப்பெரிய அகத்தொடக்கங்களாக அமையும் தன்மை கொண்டவை. நம்மைச் சுற்றியுள்ள ஆலயங்கள் மாபெரும் நூல்கள். நமக்கு அவற்றின் மொழி தெரியாது. சட்டென்று அவை நம்முடன் உரையாடத் தொடங்கிவிடும் அனுபவத்தை நாம் அடைகிறோம். அதன் பின் நாம் வாழ்நாளெல்லாம் வாசிக்கலாம்
நாள் ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31
அறிவிக்கப்பட்ட வகுப்புகள்- இடமிருப்பவை
ஏ.வி.மணிகண்டனின் நவீன ஓவிய அறிமுக நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இது வரை கிட்டத்தட்ட 200 பேர் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு முதன்மையான பண்பாட்டுக் கல்வி, நவீன உலகை அறிமுகம் செய்துகொள்ள மிக அடிப்படையான ஒன்று என இளையதலைமுறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நவீன ஓவியக்கலையே இன்றைய கட்டிட வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வெவ்வேறு ‘பிராண்ட் டிசைன்கள்’ முதல் இணையதள வடிவமைப்பு வரை அனைத்துக்கும் அடித்தளமான அழகியலை உருவாக்குவது. ஆனால் இந்தியாவில் இன்று இக்கல்விகளை பெறுபவர்கள்கூட நவீன மேலைநாட்டு ஓவியம் பற்றிய அறிமுகம் அளிக்கப்பட்டவர்கள் அல்ல.
நம்மைச் சூழ்ந்துள்ள நவீன வாழ்க்கையையும் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள மிக அடிப்படையாக அமையும் பயிற்சி இது.
ஆகஸ்ட் 8,9 மற்றும் 10
வரவிருக்கும் வகுப்புகள்

வாசிப்பு வகுப்புகள்
நவீன நூல்களை வாசிப்பதற்கான அடிப்படைகளைக் கற்பிக்கும் வகுப்புகள் 3 முன்னர் நிகழ்ந்துள்ளன. மீண்டும் தேவையா என்னும் எண்ணம் இருந்தது. நேரமும் இல்லை. 25 பேர் முன்னரே பணம் கட்டி, வகுப்பை அவர்களே முடிவு செய்து எழுதியமையால் மீண்டும் நிகழ்கின்றன. மேலும் சிலர் சேர்ந்துகொள்ள முடியும்.
இது கட்டுரை நூல்களை வாசிப்பதற்கும், உள்வாங்கிக்கொள்வதற்குமான பயிற்சி மட்டும்தான்.
நாள் செப்டெம்பர் 5, 6 மற்றும் 7