மேலைத்தத்துவ அறிமுகம் 

அஜிதன் நடத்திவரும் மேலைத்தத்துவ வகுப்புகள் பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய நவீனச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள, இன்றைய அரசியலையும் திரைப்படம் உட்பட கலைகளையும், இலக்கியத்தையும் உள்வாங்க அவையே அடிப்படையானவை. மேலைச்சிந்தனைப் பயிற்சி அற்ற ஒருவரால் அவற்றை முழுமையாக புரிந்துகொள்ளவோ மதிப்பிடவோ முடியாது. நிர்வாகவியலில்கூட அடிப்படைகள் மேலைச்சிந்தனை சார்ந்தவை. ஆகவே நவீன மனிதனுக்கு தவிர்க்கவேமுடியாதவை.

மேலைச்சிந்தனைகளை நாம் துண்டுதுண்டாக கட்டுரைகள், மேற்கோள்கள் வழியாகவே அறிந்திருக்கிறோம். அவை பலசமயம் நம் கற்பனைகள், அந்தத சூழல்கள் ஆகியவற்றை ஒட்டி பெரும்பாலும் நம்மால் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். தொடக்கம் முதல் மேலைச்சிந்தனை  எப்படி அடிப்படையான வினாக்கள், மற்றும் அவற்றின் மீதான விவாதமாக உருவாகி வந்துள்ளது என்பதை அறிவது மிக அவசியமான ஒன்று.

அத்தகைய அறிமுக வகுப்பு இது. ஒட்டுமொத்தமாக நவீன மேலைச்சிந்தனைகளை அறிமுகம் செய்து, அவற்றை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கான அடிப்படைகளையும் அளிக்கிறது.

 

நாள் மார்ச் 14, 15 மற்றும் 16

தொடர்புக்கு

[email protected]

முந்தைய கட்டுரைஆன்லைனும் குருகுலமும்
அடுத்த கட்டுரைமுதல்நிலை தத்துவ வகுப்பு மீண்டும் எப்போது?