இஸ்லாம், சூஃபி மரபு- வகுப்புகள்

 

நிஷா மன்ஸூர் ஏற்கனவே நடத்திய இஸ்லாமிய தத்துவம்- சூஃபி மரபு அறிமுகம் ஓர் மகத்தான அனுபவமாக அமைந்தது என்று பங்கேற்றோர் கூறினார்கள். குறிப்பாக இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமின் வரலாறு, அதன் ஆன்மிகமையம் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இஸ்லாமை மட்டும் அல்ல ஆன்மிகம், கலை ஆகிய அனுபவங்களையே முற்றிலும் புதிய ஒளியில் பார்க்கச்செய்த மாபெரும் தொடக்கமாக அது அமைந்தது என்றனர்.

இஸ்லாமிய- சூபி தத்துவம் இந்திய கலைமரபை, இந்திய இசைமரபை அறிந்துகொள்பவர்கள் தவிர்க்கவே முடியாத ஒன்று. இந்திய வரலாற்றையும் தமிழ் வரலாற்றையும் அறியமுனைபவர்கள் அறிந்தாகவேண்டியது. ஆனால் மிகக்குறைவாகவே தமிழர்கள் இஸ்லாமிய தத்துவத்தை அறிந்துள்ளனர். இது அவ்வாறு அறிவதற்கான அறிவார்ந்த ஒரு வாய்ப்பு.

ஆன்மிக சாதகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆன்மிகத்தின் அல்லது யோகத்தின் எந்த ஒரு வழியை பின்பற்றுபவர்கள் என்றாலும் இஸ்லாமிய மெய்யியல் – ஆன்மிக அறிவு என்பது அவர்களின் ஞானத்தை துலங்கச்செய்வதைக் காண்பார்கள். அதை இந்திய மெய்ஞானியர் கபீர் முதல் குருநானக் வரை, ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நித்ய சைதன்ய யதி வரை கூறியுமுள்ளனர்

மீண்டும் இஸ்லாமிய- சூபி தத்துவ அமர்வுகள் நவம்பர் 22, 23 மற்றும் 24 அன்று நிகழும்.

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்

இஸ்லாம், கடிதம்

இஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்

இஸ்லாம், கடிதம்

இஸ்லாமிய அறிமுகம், கடிதம்

இஸ்லாமிய ஞானம்- கடிதம்

இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

 

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்

(இடமிருப்பவை)

 

சைவசித்தாந்த அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன.வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகள் வகுப்புகளை நடத்துகிறார். சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்ற சாந்திகுமார அடிகள் நடத்திய சென்ற வகுப்புகள் குறித்து பெரும் உளக்கிளர்ச்சியுடன் பங்கேற்பாளர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்திய சிந்தனையின் விரிவான வரைபடத்தை அளித்து, அதில் சைவத்தின் இடத்தை வகுத்து, அதன் ஒவ்வொரு அடிப்படைக்கொள்கையையும் நவீனகாலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காக அவர் கற்பித்த எளிமையான அறிமுகம் ஒரு மாபெரும் முன்னுதாரணம் என்றனர்.

தமிழகத்தில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவத்தை அறிந்தவர்கள் அவர்களில் மிகச்சிலரே. ஓர் எளிய அறிமுகமே நம் ஆலயங்களை, நம் அன்றாடச் சடங்குகளை முற்றிலும் புதிய ஒளியில் காட்டிவிடும் என்பதை கற்றவர்கள் உணரமுடியும். நம் வாழ்க்கையின் கோணமே அதனூடாக மாறிவிடும்.

இது மதக்கல்வி அல்ல. ஆசாரப்பயிற்சியும் அல்ல. இது முற்றிலும் தத்துவக் கல்வி. எந்த தத்துவத்திலும் ஈடுபாடுள்ளவர்கள் கற்கலாம். எல்லா தத்துவமரபையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் பங்கேற்கலாம்.

சைவசித்தாந்தத்தை எளிய அன்றாடமொழியில், ஆனால் மேடைப்பேச்சுகளின் பாணியில் சாதாரணமாக ஆக்காமல் முறையான வகுப்புகளாகக் கற்பிக்கும் இன்னொரு இடம் இன்று இல்லை. நவீன இலக்கிய வாசிப்பும், மேலைச்சிந்தனைகளில் பயிற்சியும் உடையவர் சாந்திகுமார சுவாமிகள். அவரிடமிருந்தே இன்றைய நவீன வாசகன் சைவத்தை இனிய கற்றலனுபவமாக அடைய முடியும்

நாள் அக்டோபர் 25, 26 மற்றும் 27 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

  • சைவசித்தாந்த வகுப்பு -கடிதம்
  • சைவசித்தாந்த வகுப்பு – கடிதம்
  • சைவசித்தாந்த வகுப்பு -கடிதம்
  • சைவசித்தாந்தமும் தத்துவக் கல்வியும்,ஒரு வினா

    நவீனமருத்துவ அறிமுகம் 

    மருத்துவர் மாரிராஜ் நடத்திய நவீன மருத்துவ அறிமுக வகுப்பு மிக உதவியானதாக இருந்தது என்றும், குறிப்பாக மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது என்றும் கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன.

    நவீன மருத்துவம் நம் வாழ்க்கையின் அன்றாடத்துடன் தொடர்புடையது, ஆனால் அதைப்பற்றி நமக்கு பெரிதாக ஏதும் தெரியாது, நாமறிந்துள்ளவை பெரும்பாலும் செவிவழிச்செய்திகளும் கற்பனையும்தான் ஆகவேதான் போலிமருத்துவங்களுக்கு எளிதில் ஆட்படுகிறோம். முறையாக அறிந்துகொள்வது நூற்றுக்கணக்கான அன்றாடச்சிக்கல்களில் இருந்து நம்மைக் காப்பது. குறிப்பாக குழந்தைகளோ முதியோரோ நம் இல்லத்தில் இருந்தார்கள் என்றால் மிக அவசியமானது.

    இது மருந்து, மற்றும் நோய்கள் பற்றிய தகவல் கல்வி அல்ல. உடல் என்னும் விந்தை செயல்படும் முறையைப்பற்றியும் அதனுடன் நாம் கொள்ளும் உறவு பற்றியும் நிகழும் வகுப்பு. நம்மைப்பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையையே மாற்றியமைக்கும் கல்வி.

இந்திய யோகமுறை எதுவானாலும் அதை மெய்யாக அறியவிரும்புபவர்கள், அடைய நினைப்பவர்கள் கற்றாகவேண்டியது மேலை உடற்கூறியல் மற்றும் மருந்தியல். யோக ஆசிரியரான குருஜி சௌந்தர் அவருடைய மாணவர்களுக்காக மாரிராஜ் அவர்களின் பல வகுப்புகளை ஒருங்கிணைத்துள்ளார். இந்த வகுப்புகளும் அந்த அடிப்படையிலேயே அமைகின்றன

நாள் நவம்பர் 1,2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு)

இந்திய ஆலயக்கலை அறிமுகம். தொடக்கநிலையினருக்காக 

ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் இந்திய ஆலய- சிற்பக்கலை அறிமுக வகுப்புகளில் இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஜெயக்குமாருடன் தாராசுரம், நார்த்தாமலை, பேலூர், ஹம்பி, அஜந்தா என தொடர் சிற்பக்கலைப் பயணங்களையும் செய்து வருகிறார்கள். இரண்டாம் நிலை வகுப்புகள் முடித்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று சிறு நூல்களை எழுதும் பயிற்சி பெற்று பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த வகுப்புகள் இந்திய ஆலயக்கலையை எப்படி ரசிப்பது என்பதற்கான அடிப்படைப் பயிற்சிகளை அளிக்கின்றன. மிகத்தொடக்கநிலையினர்கூட பங்கேற்கலாம். இந்திய கோயில்களின் அமைப்பு, இந்தியச் சிற்பங்களின் அழகியல் ஆகியவை கற்பிக்கப்படும். நாம் சாதாரணமாகச் சென்றுவரும் ஆலயங்கள் சட்டென்று முற்றிலும் புதிய ஒளியில் துலங்க ஆரம்பிப்பது வாழ்வின் புதிய தொடக்கமாகவே அமைவது என்பதை பலரும் பதிவுசெய்துள்ளனர்.

சிற்பங்களை அறிவது என்பது வெறுமே கலைப்பயிற்சி மட்டும் அல்ல. ஆன்மிக- தியானப் பயிற்சியும்கூட. ஆலயச் சிற்பங்கள் நுண்பொருட்களை விழிவழியாக உணர்த்தும்பொருட்டு உருவாக்கப்பட்டவை. முறையாக அறியாமல் அவற்றை நாம் உணரமுடியாது.

நாள் 8 9 மற்றும் 10 நவம்பர் (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 

வரவிருக்கும் நிகழ்வுகள்

(இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்)

 

இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய உளவியல் சவால் என்பது கவனசசிதறலை வென்று நம் உள்ளத்தைக் குவிப்பதுதான். மாபெரும் ஊடகப்பெருக்கம் இன்று  நம்மை விளம்பரங்களாக, கேளிக்கையாக, சூதாடடமாக சிதறடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான பூராடடமாகவே நம் வாழ்க்கை மாறியுள்ளது. உலகமெங்கும் இன்று ஆசியாவின் தியானமும் யோகமும் பெற்றுள்ள பெரும் புகழ்  இதனால்தான்.

தில் லை செந்திலப்பிரபு அவர்கள் கற்பிக்கும் இந்த கவனக்குவிப்பு- தியான முறை இன்றைய நவீன மனிதனுக்காக பண்டைய யோகமுறைகளையும் தியான முறைகளையும் சில ஹடயோக முறைகளையும் காலத்து உருவாக்கப்பட்ட்து எளிமையான பயிற்சிகள் வழியாக உளக்குவிப்பை பயிற்றுவிக்கிறார்.

1970 களில் உருவாக்கி உலகமெங்கும் சென்று வெற்றிபெற்ற இம்முறை இன்று தொடர்சசியான ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்களின் வாழ்க்கை சார்ந்த எதிர்வினைகள் வழியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கடைப்பிடிப்பதற்கு எளியதும்கூட.

தில்லை செந்திலப்பிரபு அவர்கள் நவீன யோக- தியான முறைகளில் முப்பத்தைந்து ஆண்டுக்கால பயிற்சியும் அனுபவமும் கொண்டவர்.

நாள் நவம்பர் 29, 30 டிசம்பர் 1

கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள்

சிறில் அலெக்ஸ் நடத்தும் கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள் இரண்டுமுறை நிகழ்ந்துள்ளன. கிறிஸ்தவம் பற்றி நமக்குத்தெரிந்திருப்பது கொஞ்சம். முறையான அறிமுகம் நமக்கு மிகப்பெரிய ஆன்மிக வெளிப்பாடாக அமையும். நம் மதங்களை நாமே மேலும் அறியவும் உதவும்/

வெறும் தத்துவ- ஆன்மிக அறிமுகங்கள் அல்ல இவை. ஒருபக்கம் இவை மத்திய ஆசிய- ஐரோப்பிய வரலாற்றின் அறிமுகம். இன்னொருபக்கம் ஐரோப்பிய சிந்தனை மரபின் அறிமுகம். ஐரோப்பாவை அதன் பண்பாட்டுப்பின்புலத்துடன் அறிந்துகொள்ளவும் இவை மிக உதவியானவை

டிசம்பர் 6,7 மற்றும் டிசம்பர் 8

விண்ணப்பிக்கலாம்

வைணவ இலக்கிய அறிமுகம்

வைணவ பக்தி இலக்கிய அறிமுகம் ஜா.ராஜகோபாலன் மீண்டும் நடத்துகிறார்.

வைணவ பக்தி இலக்கியம் தமிழின் மொழியழகை, இலக்கிய நயங்களை அறிவதற்குரிய அரசப்பெருவழி. கம்பராமாயணம் உள்ளிட்ட பேரிலக்கியங்களுக்குள் நுழைவதற்கான வழியும்கூட. அதற்கப்பால் , அது ஒரு மகத்தான ஆன்மிகக்கல்வி. மானுட உணர்வு நிலைகளின் உச்சங்கள் வழியாக தத்துவத்தை, மெய்யியலைச் சென்று தொடுவது அப்பயணம்.

மரபிலக்கியத்தை எளிதாக, நேரடியாகப் பயிலமுடியாது. பொருளுணர்வது கடினம். அதைவிட உளநிலை அமைவது கடினம். உரிய ஆசிரியரிடமிருந்து கற்பதென்பது ஒரு பெருந்தொடக்கம்

நாள் December 13 -14 -15 )

 

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

மேலைத்தத்துவம்  

அஜிதன் நடத்திய மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு ஒருமுறை நிகழ்ந்துள்ளது.  கலந்துகொண்டவர்கள் தத்துவம் அளிக்கும் கற்றல் அனுபவம் என்ன என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள். நவீன வாழ்க்கை, நவீன அறிவியல் அனைத்தைப்பற்றியும் சிந்தனையில் ஒரு தொடக்கம் நிகழ்ந்ததாக எழுதியிருந்தனர். இன்றைய நவீனக்கல்விபெறும் எவரும் அடைந்தே ஆகவேண்டிய முழுமையான பயிற்சி இது.

இது முன்பு நிகழ்ந்த வகுப்பின் மறுநிகழ்வு. புதியவர்களுக்கானது.  இதில் மேலைத்தத்துவம் ஒட்டுமொத்தமாகவும், அதன் அடிப்படையான நவீன ஜெர்மானிய தத்துவம் (காண்ட், ஹெகல்.ஷோப்பனோவர், நீட்சே) முதன்மையாகவும் கற்பிக்கப்படும்.

டிசம்பர் 27,28 மற்றும் 29 அன்று நிகழும்.

 

முந்தைய கட்டுரைநம்மை நாம் ஆளமுடியாமலாவது…
அடுத்த கட்டுரைகாணொளிகள் வழியாக…