லோகமாதேவி நடத்திய தாவரவியல் வகுப்புகள் அண்மையில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய உலகில் செயற்கையான இணையக்கேளிக்கைகளில் அடிமையாகக் கிடக்கும் தலைமுறைக்கு இயற்கையுடன் அறிமுகம் கொள்வதற்கு மிகச்சிறந்த வழியாக அமைபவை இந்த வகுப்புகள். குழந்தைகளை செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதற்கு உதவியானவை. இந்த வகுப்புகளில் லோகமாதேவி நம்மைச்சுற்றி உள்ள தாவரங்களை, அவற்றின் விந்தைகளை சுவாரசியமான வகுப்புகள் மற்றும் நேரடி கானுலா வழியாக அறிமுகம் செய்கிறார். முனைவர்.லோகமாதேவி உலக அளவில் முதன்மையான தாவரவியல் ஆவண இதழ்களில் எழுதிவரும் பேராசிரியர்
- மே 16 17 மற்றும் 18
- [email protected]
லோகமாதேவி இணையப்பக்கம்
- தாவரவியல் கல்வி எப்படிப்பட்டது?
- வனம், வகுப்பு- கடிதம்
- மந்தாரை- கடிதம்
- தாவர உலகம், கடிதம்
- தாவரங்கள், கடிதம்
- தாவரங்களும் குழந்தைகளும்
- தாவரங்களின் பேருலகம்
- தீராத இன்பங்கள்
- தாவர உலகம், கடிதம்
அறிவிக்கப்பட்ட வகுப்புகள்( இடமிருப்பவை)

கிறிஸ்தவ மெய்யியல் அறிமுகம்
சிறில் அலெக்ஸ் நடத்தும் மூன்றாவது கிறிஸ்தவ மெய்யியல் அறிமுக வகுப்பு இது. இதற்கு முந்தைய வகுப்புகள் மிகப்பெரிய வரலாற்று- பண்பாட்டு அறிமுகமாக அமைந்திருந்தன என்று பலரும் எழுதியிருந்தார்கள்.
கிறிஸ்தவமே ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படை. கிறிஸ்தவ இறையியலைப் புரிந்துகொள்ளாமல் ஐரோப்பிய இலக்கியம், திரைப்படம் எதையும் சரிவர அறிய முடியாது. ஐரோப்பியப் பண்பாட்டை ஒட்டியே நாம் வாழும் இன்றைய நவீனப்பண்பாடும் உருவாகியுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களேகூட கிறிஸ்தவ இறையியலையோ, வரலாற்றையோ அறிந்தவர்கள் அல்ல. வெறும் பக்தியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள், எஞ்சியோர் எதையும் அறிந்திருக்கவில்லை.
ஒரு நவீன வாசகன் உலகசிந்தனைக்குள் நுழைவதற்கு கிறிஸ்தவ இறையியல் அறிமுகம் மிக அவசியமானது. இந்து மெய்யியலை முழுதறியவும்கூட அதை அறிவதும் ஒப்பிடுவதும் அவசியமானது. சிறில் கிறிஸ்தவ இறையியலை முறையாகக் கற்றவர். நவீன இலக்கிய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும்கூட. நிதானமான, நகைச்சுவையுணர்வுகொண்ட பேச்சாளர். இக்கல்வியை அளிக்க முதன்மைத் தகுதி கொண்ட ஆளுமை
நாள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13
தொடர்புக்கு
[email protected]
- கிறிஸ்தவக் கல்வி இந்து ஆன்மிகத்திற்கு எதற்காக?
- கிறிஸ்தவ இறையியல் கல்வி- கடிதம்
- கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
- பைபிள், கடிதங்கள்
- விவிலிய தரிசனம்
-
(பறவைபார்த்தல் வகுப்புகளில் இடங்கள் நிறைவு)
ஜெயக்குமார் நடத்தும் ஆலயக்கலை வகுப்புகளில் சென்ற மூன்றாண்டுகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். பலர் வாழ்க்கையின் திருப்புமுனை நிகழ்வென்றே அதைக் குறிப்பிடுகிறார்கள். நம் கலைச்செல்வங்களை, நம் மரபை ஒரே வீச்சில் அறிமுகம் செய்து ஒரு புதிய உலகுக்கு அழைத்துச்செல்லும் வகுப்புகள் இவை. இந்தியாவின் மகத்தான இந்து, பௌத்த, சமண ஆலயங்களின் கட்டமைப்பு, சிற்பங்களின் அழகியல் ஆகியவற்றை இந்த வகுப்புகள் வழியாக ஜெயக்குமார் கற்பிக்கிறார்.
நாள் மே 23 24 மற்றும் 25
வைணவ இலக்கியம்
ஜா.ராஜகோபாலன் மீண்டும் ஒரு வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார். வைணவ இலக்கியத்தை அறிமுகம் செய்வதென்பது ஒருபக்கம் வைணவ தத்துவம் மறுபக்கம் சங்ககால அகப்பாடல்களில் இருந்து தொடர்ந்து வரும் தமிழ் அழகியல் மரபு இரண்டையும் அறிந்துகொள்வதுதான். இரண்டிலும் பயிற்சி உடைய ஒருவர் மட்டிலுமே அவ்வகுப்பை நடத்த முடியும். வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஒரு பக்கம் பக்தி என்னும் உணர்வின் வெளிப்பாடு. இன்னொரு பக்கம் தூய தமிழ் அனுபவம். தமிழ்மரபை அறிய விரும்பும் எவரும் தவிர்க்கமுடியாத ஒன்று.
நாள் மே 30 31 ஜூன் 1