இந்திய ஆலயக்கலை ரசனைப்பயிற்சி

இந்திய ஆலயக்கலை அறிமுகம். தொடக்கநிலையினருக்காக 

ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் இந்திய ஆலய- சிற்பக்கலை அறிமுக வகுப்புகளில் இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஜெயக்குமாருடன் தாராசுரம், நார்த்தாமலை, பேலூர், ஹம்பி, அஜந்தா என தொடர் சிற்பக்கலைப் பயணங்களையும் செய்து வருகிறார்கள். இரண்டாம் நிலை வகுப்புகள் முடித்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று சிறு நூல்களை எழுதும் பயிற்சி பெற்று பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த வகுப்புகள் இந்திய ஆலயக்கலையை எப்படி ரசிப்பது என்பதற்கான அடிப்படைப் பயிற்சிகளை அளிக்கின்றன. மிகத்தொடக்கநிலையினர்கூட பங்கேற்கலாம். இந்திய கோயில்களின் அமைப்பு, இந்தியச் சிற்பங்களின் அழகியல் ஆகியவை கற்பிக்கப்படும். நாம் சாதாரணமாகச் சென்றுவரும் ஆலயங்கள் சட்டென்று முற்றிலும் புதிய ஒளியில் துலங்க ஆரம்பிப்பது வாழ்வின் புதிய தொடக்கமாகவே அமைவது என்பதை பலரும் பதிவுசெய்துள்ளனர்.

சிற்பங்களை அறிவது என்பது வெறுமே கலைப்பயிற்சி மட்டும் அல்ல. ஆன்மிக- தியானப் பயிற்சியும்கூட. ஆலயச் சிற்பங்கள் நுண்பொருட்களை விழிவழியாக உணர்த்தும்பொருட்டு உருவாக்கப்பட்டவை. முறையாக அறியாமல் அவற்றை நாம் உணரமுடியாது.

நாள் 8 9 மற்றும் 10 நவம்பர் (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் 

பதஞ்சலி மரபு, யோகப்பயிற்சி

யோக ஆசிரியர் சௌந்தர் தொடர்ச்சியாக நடத்திவரும் யோகப்பயிற்சிகள் இன்று பெரும்புகழ்பெற்றுவிட்டன. மலேசியா, ஶ்ரீலங்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தொடர்ச்சியாகச் சென்று யோக வகுப்புகளை நடத்தி வருகிறார்.

இவை பதஞ்சலி வடிவமைத்த முறைமை சார்ந்தவை. சத்யானந்த மரபைச் சேர்ந்தவரான குரு சௌந்தர் அதன் பிகார் மடம் வழியாக முப்பதாண்டுக்கால பயிற்சி கொண்டவர். அந்த மரபின் முதுநிலைப் பயிற்சியாளர், யோகி என்னும் அடையாளம் பெற்றவர். ஏராளமான யோகஆசிரியர்களை உருவாக்கியவர்.

நவீன இலக்கியவாசிப்பும், தத்துவப்பயிற்சியும் கொண்டவர் சௌந்தர். யோகம் ஓர் உடற்பயிற்சியோ உளப்பயிற்சியோ மட்டும் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கைப்பயிற்சியும் ஆன்மிகப்பயிற்சியுமாகும். அதற்கு முறையான தகுதியான ஆசிரியர் அமையவேண்டும். அவ்வாசிரியருடன் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் உறவு உருவாகவேண்டும்.யோகசாதகன் அவருடன் தொடர் உரையாடலில் இருந்தாகவேண்டும்.  அத்தகைய ஆசிரியரான சௌந்தரிடம் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் ஓர் இயற்கைசூழ்ந்த இடத்தில் அமர்ந்து கற்றுக்கொள்வதற்காக இந்த அரங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன

சௌந்தர் நடத்தும் யோக அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழவிருக்கின்றன.

நாள்: அக்டோபர் 18 ,19 மற்றும் 20 

ஆர்வமுள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு [email protected]

சைவசித்தாந்த அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன.வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகள் வகுப்புகளை நடத்துகிறார். சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்ற சாந்திகுமார அடிகள் நடத்திய சென்ற வகுப்புகள் குறித்து பெரும் உளக்கிளர்ச்சியுடன் பங்கேற்பாளர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்திய சிந்தனையின் விரிவான வரைபடத்தை அளித்து, அதில் சைவத்தின் இடத்தை வகுத்து, அதன் ஒவ்வொரு அடிப்படைக்கொள்கையையும் நவீனகாலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காக அவர் கற்பித்த எளிமையான அறிமுகம் ஒரு மாபெரும் முன்னுதாரணம் என்றனர்.

தமிழகத்தில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவத்தை அறிந்தவர்கள் அவர்களில் மிகச்சிலரே. ஓர் எளிய அறிமுகமே நம் ஆலயங்களை, நம் அன்றாடச் சடங்குகளை முற்றிலும் புதிய ஒளியில் காட்டிவிடும் என்பதை கற்றவர்கள் உணரமுடியும். நம் வாழ்க்கையின் கோணமே அதனூடாக மாறிவிடும்.

இது மதக்கல்வி அல்ல. ஆசாரப்பயிற்சியும் அல்ல. இது முற்றிலும் தத்துவக் கல்வி. எந்த தத்துவத்திலும் ஈடுபாடுள்ளவர்கள் கற்கலாம். எல்லா தத்துவமரபையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் பங்கேற்கலாம்.

சைவசித்தாந்தத்தை எளிய அன்றாடமொழியில், ஆனால் மேடைப்பேச்சுகளின் பாணியில் சாதாரணமாக ஆக்காமல் முறையான வகுப்புகளாகக் கற்பிக்கும் இன்னொரு இடம் இன்று இல்லை. நவீன இலக்கிய வாசிப்பும், மேலைச்சிந்தனைகளில் பயிற்சியும் உடையவர் சாந்திகுமார சுவாமிகள். அவரிடமிருந்தே இன்றைய நவீன வாசகன் சைவத்தை இனிய கற்றலனுபவமாக அடைய முடியும்

நாள் அக்டோபர் 25, 26 மற்றும் 27 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு [email protected]

 

வரவிருக்கும் நிகழ்வுகள்

 

இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை

இந்திய தத்துவ அறிமுகம் நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் பங்குகொள்ளலாம்.

நாள் நவம்பர் 15 16 மற்றும் 17 

இஸ்லாமிய தத்துவம் சூஃபி மரபு

நிஷா மன்ஸூர் ஏற்கனவே நடத்திய இஸ்லாமிய தத்துவம்- சூஃபி மரபு அறிமுகம் ஓர் மகத்தான அனுபவமாக அமைந்தது என்று பங்கேற்றோர் கூறினார்கள். குறிப்பாக இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமின் வரலாறு, அதன் ஆன்மிகமையம் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இஸ்லாமை மட்டும் அல்ல ஆன்மிகம், கலை ஆகிய அனுபவங்கலையே முற்றிலும் புதிய ஒளியில் பார்க்கச்செய்த மாபெரும் தொடக்கமாக அது அமைந்தது என்றனர்.

மீண்டும் இஸ்லாமிய- சூபி தத்துவ அமர்வுகள் நவம்பர் 22, 23 மற்றும் 24 அன்று நிகழும்.

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்

இஸ்லாம், கடிதம்

இஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்

இஸ்லாம், கடிதம்

இஸ்லாமிய அறிமுகம், கடிதம்

இஸ்லாமிய ஞானம்- கடிதம்

இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

 

இடங்கள் நிறைவுற்றவை

பறவை பார்த்தல் பயிற்சி 

(இடங்கள் நிறைவுற்றன. மீண்டும் ஜனவரியில் நிகழலாம்)

 

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

முந்தைய கட்டுரைஅயல்நாட்டில் தத்துவ வகுப்புகள்
அடுத்த கட்டுரைமலையுச்சிப் பொன்